09/03/2014

வேலைக்கு போகும் பெண்களில் 78% பேர் மன அழுத்தம் + உடல் பருமன் போன்ற அவஸ்தை..!



உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையோட்டி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோச்சம் வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் மற்றும் மண நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. டெல்லி, பெங்களூர், சென்னை, ஹய்தராபாத், லக்னோ, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த 10க்கும் அதிகமான துறைகளில் பணிபுரியும் பெண்கள் 2,700 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

 அதன்படி நவீன உலகில் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் நடுத்தர வயதினரும் பெரும் எண்ணிக்கையில் வேலைக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 32 வயது முதல் 58 வயது வரையான பெண்களில் 78% பேர் கடும் பணிச்சுமை காரணமாக மண அழுத்தம், உடல் பருமன், முதுகுவலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் அசோச்சம் தெரிவித்துள்ளது.இளம் வயதினர் மாற்று வேலை தேடிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

அதேசமயம், நடுத்தர வயதினருக்கு அடிக்கடி பணிமாற்றிக்கொள்வது சாத்தியம் இல்லாதது என்பதோடு இருக்கும் வேலையையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக அசோச்சம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திருமணமாகாத பெண்களுக்கு குடும்பச்சுமைகள் மிகக்குறைவு ஆனால், மனமாகி குழந்தைபேறு இல்லாதோர் குழந்தைகள் இருந்தாலும் அவர்களை சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்று கவலைப்படுவோர், இளம் வயதினருக்கே அதிக முன்னுரிமை தருவதாக குற்றம் சாட்டுவோர் கூடுதல் நேர பணிச்சுமையால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு, இப்படியாக நடுத்தர வயது பெண்களின் சுமை நீள்வதாக அசோச்சம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஊடகம், பொழுதுபோக்கு, ஐடி -துறைகளில் பணிபுரியும் அனைத்து தர்ப்பு பெண்களும் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்ற கவலையிலேயே பெரும்பாலான பணி நேரத்தை செலவிடுகின்றனர் என்றும், இதனால் உரிய காலத்துக்குள் பணியை முடிக்காமல் அவதியுற நேரிடுவதாகவும் அசோச்சம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் என்றால் வீட்டுக்கு அருகிலேயே அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலேயே குடியிருப்பை மாற்றி அமைத்து கொள்கின்றனர்.

மேலும் நகர்புறங்களில் அதிக வாடகை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பணிபுரியும் இடத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். இருந்தாலும், குறைவான போக்குவரத்து வசதிகள், நெரிசல்மிகுந்த பயண வாழ்க்கை போன்றவற்றால் பெண்கள் சிரமப்படுவதாகவும் அசோச்சம் கூறியுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் மனரீதியான நோய்கள், உடல் உபாதைகளுக்காக மாதந்தோறும் சராசரியாக தங்களது ஊதியத்தில் ரூ.5,000 வரை நடுத்தர பெண்கள் செலவிட வேண்டியுள்ளதாக அசோச்சம் தெரிவித்துள்ளது. 
+

பெண்களே உங்கள் அக்குள் கருமையாக இருக்கின்றதா..? கவலை வேண்டாம்..!



அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம். 
+

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை..!



இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. 
+