22/08/2014

அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ் தெரியுமா உங்களுக்கு..?

நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் சருமம் வளுவளுவென வெண்ணிறத்தில் பொலிவடைந்து காணப்படும்.

சருமத்தை பொழிவடையச் செய்யும் வழிகள்:
வேக வைக்காத அரிசியை சரியாக இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அரிசியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கற்களை நீக்கி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

சுத்தப்படுத்திய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி அந்த பாத்திரத்தை மூடி விடவும். அரிசி அனைத்தும் பாத்திரத்தின் அடி பாகத்தில் வந்தடைய, அதை 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.

இப்போது பழுப்பு அல்லது பாலின் நிறத்திலான அந்த நீரை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த நீரை கொண்டு உங்கள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவுங்கள். பின் உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் வரை அப்படியே இருங்கள்.

காய்ந்த பிறகு அந்த அரிசி நீரை கொண்டு மீண்டும் ஒரு முறை முகத்தை கழுவுங்கள். உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் போது, அரிசி நீரில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் கனிமங்களும் உங்கள் சரும துவாரங்கள் வழியாக உள்ளேறும்.

முகத்தை கழுவிய பின்பு, உங்கள் சருமத்தை கையால் வருடும் போது அதிலுள்ள மென்மையை நீங்கள் உணரலாம். இதனால் ஆர்கானிக் மேக்-அப் வகையாக கருதப்படும் இதனை பின்பற்றி பொலிவடைந்து ஜொலிஜொலிக்கும் சருமத்தை பெறலாம்.

நாம் பயன்படுத்தும் அரிசி ஒரே தரத்தில் இருப்பதில்லை. அதனால் உங்கள் மேனியின் பளபளப்பு அதிகரிக்க விதவிதமான அரிசி வகைகளை பயன்படுத்தி பாருங்கள். 
+

வாயு தொல்லைக்கு பலா கொட்டை சாப்பிடுங்கள்..!


சிலருக்கு வாயு தொல்லையால் வயிறு வீங்கி, கர்ப்பிணி போன்ற தோற்றம் இருந்தால், நான்கு அல்லது ஐந்து பலாக்கொட்டைகளை தணலில் சுட்டு சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்குவதுடன், வயிறும் சிக்கொன்றாகிவிடும்.

* உடல் சூட்டினால் சிலருக்கு வயிறு வீங்கிப் போகலாம். சிலருக்கு சூட்டினால் உடல் களைத்துப் போகலாம். இவர்கள் பலா இலையில் சாதத்தை சூடாகப் போட்டு சாப்பிட்டால், உடலின் சூடு தணிந்து பொலிவும் புத்துணர்வும் அதிகரிக்கும்.

* சிலருக்கு, மலச்சிக்கலால் முகத்தில் பருக்கள் ஏற்பட்டு, அரிப்பெடுக்கும். சீல் கோத்து வடுக்கள் தோன்றி, முகம் பார்க்கவே அசிங்கமாகிவிடும். இந்த சிக்கலைப் போக்கி சிங்கார அழகைக் கொடுக்கிறது பலா வேர்.

* பலா வேரைத் துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அதை வடிகட்டி ஒரு டம்ளர் குடியுங்கள். இது மலமிளக்கியாகச் செயல்பட்டு, பருக்களைப் போக்கிப் பொலிவைக் கொடுக்கும்.
+

கண் பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் திராட்சை.. - விஞ்ஞானிகள் தகவல்

திராட்சை பழம் அளிக்கும் பொதுவான சுகாதார நலன்கள் தவிர கண் பாதுகாப்பிலும் இது முக்கிய பங்களிக்கின்றது என்ற தகவலை சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளப்படும் திராட்சைப் பழத்தினால் கண் விழித்திரை அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது என்று அவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

எலிகளிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டபோது தினசரி உணவில் திராட்சை சேர்க்கப்பட்ட எலிகளின் விழித்திரை இயக்கம் மிகவும் வியப்பூட்டுவதாக அமைந்திருந்தது என்று புளோரிடா மாகாணத்தின் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளரான அபிகைல் ஹக்கம் தெரிவித்துள்ளார்.

கண்களில் ஏற்படும் அழுத்தங்களை எதிர்கொள்ள செல்கள் அளவிலான சமிக்ஞை மாற்றங்களை திராட்சையானது ஏற்படுத்துகின்றது என்றும் ஹக்கம் குறிப்பிட்டார். வெளிச்சத்திற்கு செயல்படும் போட்டோரிசெப்டர்ஸ் என்ற செல்கள் விழித்திரையில் உள்ளன.

எனவே விழித்திரை சிதைவு கொண்டவர்களால் வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. திராட்சை கலந்த உணவினை எடுத்துக் கொள்ளுவதன்மூலம் இத்தகைய குறைபாடு கொண்ட எலிகளால் வெளிச்சத்தை உணர இயலுமா என்பதையும் தற்போது இந்த விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

இந்த முறையில் எலிகளின் விழித்திரை இயக்கம் பாதுகாக்கப்பட்டதோடு அவற்றின் விழித்திரைகள் வலுவடைந்தும் காணப்பட்டதை இவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளில் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் திராட்சை கலந்த உணவு விழித்திரைகளுக்கான பாதுகாப்பு புரதங்களை அதிகரித்ததோடு அழற்சி ஏற்படுத்தும் புரதத்தின் அளவைக் குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற கண் மாநாட்டில் பார்வை குறித்த ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
+

சிறுநீரகத் தொற்று... காரணங்களும், தீர்வும் - இதோ உங்களுக்காக..!

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயசு பேதம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படுகிற சிறுநீரகத் தொற்று.

சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், ரத்தக் கசிவு என இது கொடுக்கும் இம்சைகள் எக்கச்சக்கம் சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியா, சிறுநீர் பையில் சேர்ந்து பிறகு வெளியேறும். இந்தப் பாதைல பொதுவா பாக்டீரியா இருக்காது. ஆனா, பக்கத்துல உள்ள மலக்குடல்ல எப்போதும் பாக்டீரியா இருக்கும்.

அங்கிருந்தும், மற்ற அந்தரங்க உறுப்புகளிலிருந்தும் பாக்டீரியா கிளம்பி, சிறுநீர் பாதைல ஏறி வந்து, அதன் விளைவா சிறுநீர் தொற்று வரலாம். இப்படி பாக்டீரியா தொற்று ஏற்படாம இருக்க பொதுவா நம்ம உடம்புல சில விஷயங்கள் நடக்கும்.

ஆனா, சம்பந்தப்பட்டவங்களோட உடம்புல எதிர்ப்பு சக்தி கம்மியா இருந்து, பாக்டீரியா தாக்கம் அதிகரிச்சா, தொற்று உண்டாகும்.ஆண்களைவிட, பெண்களுக்கே இந்த சிறுநீர் தொற்றுப் பிரச்சனை அதிகமா இருக்கு. சில ஆண் குழந்தைகளுக்கு அபூர்வமா சிறுநீர் பைக்குக் கீழே ஒரு வால்வ் இருக்கும்.

அப்படியிருந்தா, சிறுநீர் வெளியேறாது. அதே மாதிரி சில பெண் குழந்தைகளுக்கு ‘ரிஃப்ளக்ஸ்’ சொல்ற பிரச்சனை இருக்கும். அதாவது சாதாரணமா சிறுநீர் பையிலேருந்து வெளியேறும் சிறுநீரானது, மறுபடி திரும்பி, சிறுநீர் பையிலேருந்து, சிறுநீரகத்துக்குப் போகறதாலயும் இந்தத் தொற்று வரலாம்.

பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு சிறுநீரகக் குழாய்கள்ல அடைப்பு இருந்து, அதுல சிறுநீர் தங்கறதாலயும் தொற்று வரலாம். பெரியவங்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட, சிறுநீரகக் கல் காரணமா இருக்கலாம். சிறுநீர் பைக்கு கீழே உள்ள உறுப்பு விரிவடைஞ்சாலும் தொற்று வரும்.

நீரிழிவு பாதிச்சவங்களுக்கு சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படற வாய்ப்பு, மத்தவங்களைவிட 3 மடங்கு அதிகம். 5 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்துல சிறுநீர் தொற்று ஏற்படலாம். சரியா கவனிக்கத் தவறினா, குறைப்பிரசவமோ, அபார்ஷனோ ஆகலாம்.

சிறுநீர் கழிக்கிறப்ப லேசா எரிச்சல் வந்தாலே பலரும் உடனே மாத்திரை வாங்கி சாப்பிடறாங்க. அது தவறு. முதல்ல சிறுநீரை ‘கல்ச்சர் டெஸ்ட்’டுக்கு கொடுத்து, எந்தக் கிருமி, எந்தளவுக்குத் தாக்கியிருக்குனு கண்டுபிடிக்கணும்.

பிறகு மருத்துவரோட பரிந்துரைப்படி ஆன்ட்டிபயாடிக் எடுத்துக்கணும். நீரிழிவு இருக்கா, சிறுநீரகங்களோட செயல்பாடு சரியா இருக்கான்னு பார்க்கணும். சிறுநீர்ல ரத்தம் கலந்து வந்தா அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமா சிறுநீர் பாதைல பிரச்சனை இருக்கா, கல் இருக்கான்னு பார்க்கணும். பிரச்சனைக்கேத்தபடிதான் சிகிச்சைகளை எடுக்கணும்.
+

பழங்களை கழுவாமல் சாப்பிடுவது நல்லதா..?

காய்கறிகளை வாங்கி வந்தவுடன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள். நறுக்கியப் பின்பும் தண்ணீரில் அலசுங்கள்.

* பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு, காப்பர் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம் திராட்சைப் பழங்களின் மீது வெள்ளைப் புள்ளிகளைப் பார்க்கலாம். இது காய்ந்து போன பூச்சி மருந்தின் எச்சங்கள் ஆகும். பழங்களைச் சாப்பிடும் முன் தண்ணீரில் நன்றாக அலசி சாப்பிடுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்குங்கள். அதில் கொய்யா, மாம்பழம், உதிர்த்துப் போட்ட திராட்சைப் பழங்களைச் சில நிமிடங்களுக்கு ஊற விட்டு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி பின் துணியால் துடைத்து விட்டுப் பயன்படுத்துங்கள்.

* தோல் நீக்கி சாப்பிட வேண்டிய பழங்களைத் தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டுப் பின் தோல் உரித்துச் சாப்பிடுங்கள்.

* ஆப்பிளின் மெழுகு பூச்சு போக, வெந்நீரில் சில வினாடிகள் ஆப்பிளைப் போட்டு வைத்து, பின் சொர சொரப்பான துணியால் அழுத்தத் துடைத்துவிட்டு (மெழுகு போன பின்) தோலுடன் சாப்பிடலாம்.
+

டிடி ஊசி எதற்காக போட வேண்டும் - இதைப்படிங்க..!

உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும் உடனே ஓடி போய் ஏதாவது ஒரு டிடி ஊசி போடுவோம். இந்த ஊசி எதற்கு, இது எத்தனை வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேன்டும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது.

முதலில் டெட்டனஸ் ஊசி இரண்டு வகைப்படும். ஒன்று – dtap (Diphtheria and Pertussis) இன்னும் ஒரு வகை Tdap (Tetanus Boosters). முதலில் கூறிய dtap வகை குழந்தைகளுக்கு பிறந்த 2 மாதம் / 4 மாதம் / 6 மாதம் / 12 – 18 மாதம் / 4 – 6 வயது வரை இந்த வகை ஊசிகளை உங்கள் குழந்தைக்கு தவறாமல் போட்டால் Clostridium Tetani also known as Lockjaw என்னும் நோய் வராது.

10 – 12 வயது வந்தவுடன் tdap (Tetanus Boosters) வகை ஊசிகளை 10 வருடத்திர்க்கு ஒரு முறை செலுத்தினால் இந்த வகை பாக்டீரியாக்கள் உடம்பில் வராது. இந்த ஊசி போட்டு 5 வருடம் ஆன பின்னரும் ஒரு காயம் ஏற்பட்டு திறந்த புண் இருக்குமாயின் இன்னொரு முறை போடுவது நல்லது.

ஆனால் அப்படி இல்லையெனில் 8-10 வருடத்திற்க்கு போட்டால் மிகவும் நல்லது. பெரியவர்களுக்கு டெட்டனஸ் ஒவ்வாமையாகலாம் என்பதையும் அறிந்து இந்த ஊசியை செலுத்த வேண்டும்.. கடந்த பத்து வருடத்தில் ஒரு முறை கூட டெட்டனஸ் பூஸ்ட்டர் போடவில்லை எனில் ஒரு முறை செலுத்துங்கள், இந்த வேக்சின் நல்லது.
+