24/08/2014

ரத்த சோகையா..? வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்க..!

வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
வாழைக்காயில் இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி
உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள்.

ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து வாயு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

ஆகவே வாழைக்காயை அஞ்சாமல் சாப்பிடுங்கள்.

இதோ வாழைக்காய் மிளகு வறுவல்,

தேவையான பொருட்கள்: 

  • வாழைக்காய் – 1, 
  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை, 
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், 
  • உப்பு - தேவையான அளவு, 
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், 
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, 
  • கடுகு - 1 டீஸ்பூன், 


அரைப்பதற்கு

  • தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், 
  • இஞ்சி - 1/2 இன்ச், 
  • பூண்டு - 4-5, 
  • மிளகு - 2-3 டீஸ்பூன் 


செய்முறை: 

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சற்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நீரில் போட்டு பாதியாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 3 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!
+

ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்

தானிய வகைகளில் ஒன்றானது சோளம். சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும்.. இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும். அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.

சம அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டுள்ள மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். இயற்கை உணவான சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தத்தை தடுக்கிறது. மஞ்சள் நிற கர்னல்களை கொண்ட சோளம் குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது,  மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

கர்ப்பிணிபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் சோளமும் ஒன்று. கர்ப்பிணிபெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவிபுரிகிறது.

சோளமாவாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தோல் தடித்தல், எரிச்சல் ஏற்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
+

ஆண்களை அதிகம் தாக்கும் பெருங்குடல் புற்று நோய் - எச்சரிக்கை...!

மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.

ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்து பற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.

இந்த வகை நோய்கள் இருந்தால், அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?

மலக்குடல், ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது, எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம்.

‘கொலோனோஸ்கோபி‘ முறையில் பரிசோதனையும் செய்யலாம். அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும்.

அதன் மூலம் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?

சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமான இருக்கின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.
+

நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும் உருளைக்கிழங்கு..!

உருளைக்கிழங்கை அதிகம் சேர்த்தால் வாயுத் தொந்தரவு ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் கிட்டவே சேர்க்கக் கூடாத ஐட்டம் என்றெல்லாம் உருளையின் நெகடில் பலன்களை மட்டும் தான் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா?

* உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்.

* உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்பபடுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், குணமடைவர்.

* உருளை அற்புதமான சிறுநீர்ப் பெருக்கி.

* வாரத்துக்கு 2, 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கும்.

* நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தருகிறது உருளைக்கிழங்கு.

* குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
+

பார்லி தண்ணீர் குடியுங்கள்..! குடிச்சிட்டு பாருங்க..

கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு
முறையாவது அருந்த வேண்டும்.

இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.

அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ் உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவை நிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது. மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும் பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது மூன்று வேளையாவது குடிப்பது நல்லது.

மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள். தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

இதற்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில் கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும்
ஒரு கப் குடிக்க வேண்டும்.
+

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை..!

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.....

* தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.

* சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

* பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.

* கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

* லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

* உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.
+

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்..!

பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி அல்லது தோசை தான் காலை உணவாக இருக்கும். அப்படி இட்லி அல்லது தோசை செய்யும் போது, பலர் என்ன சட்னி செய்வதென்று தெரியாமல் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இங்கு இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற அருமையான மற்றும் பொருத்தமாக இருக்கும் சில சட்னி ரெசிபிக்களை தமிழ் போல்ட் ஸ்கை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது.

அவற்றை பார்த்து, அவற்றில் பிடித்ததை காலை வேளையில் செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக இந்த சட்னிக்கள் அனைத்துமே ஆரோக்கியமானவையும், வித்தியாசமானவையும் கூட. சரி, இப்போது இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்களைப் பார்ப்போமா!!!

முட்டைக்கோஸ் கொண்டு பொரியல், கூட்டு என்று தான் செய்வோம். ஆனால் அதனைக் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்ய முடியும் என்பது தெரியுமா? ஆம், முட்டைக்கோஸ் சட்னியானது தோசை, இட்லி போன்றவற்றிற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் சட்னி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? உங்கள் குழந்தை பச்சை பட்டாணி சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் குழந்தைகளுக்கு தோசை சுடும் போது, அவர்களுக்கு பச்சை பட்டாணியைக் கொண்டு சட்னி செய்து கொடுங்கள்.

இதுவரை எத்தனையோ சட்னிக்களை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் முந்திரி சட்னியை செய்ததுண்டா? இது மிகவும் அருமையான மற்றும் ஈஸியான சட்னி. அதுமட்டுமின்றி இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

காலையில் இட்லிக்கு மிகவும் சுவையான சட்னி அல்லது துவையல் செய்ய நினைத்தால், தேங்காய் வடகத் துவையலை செய்யுங்கள். இது மிகவும் சுவையுடன் இருப்பதால், எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்பதே தெரியாதது. ஏனெனில் அந்த அளவில் ருசியாக இருக்கும்.

பலருக்கு செலரி கீரையை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக அந்த கீரையை எப்படி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம். செலரி கீரையை காலையில் தோசை, இட்லி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு அதனை சட்னியாக செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

சற்று வித்தியாசமாக வீட்டில் கொள்ளு பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னியானது சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட. மேலும் மதிய வேளையில் இட்லி எடுத்து சென்றால், அதற்கு அருமையாகவும் இருக்கும்.

+

உங்களுக்கு தாறுமாறான உணவு பழக்கமா..? - அப்போ இதைப்படிங்க..!

* உங்களையும், உங்கள் உடலையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

* இதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள். சவாலாக ஏற்று சாதித்து விடுங்கள்.

* மன நலத்திற்கான மருந்துகளை மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். உணவினை மன மகிழ்விற்காக சாப்பிடுபவர் அநேகம். ஆனால் சரியான அளவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் கிடைத்தால் மனதில் உணவிற்காக ஏங்கும் பழக்கம் போய் விடும். எனவே, சரி விகித உணவினை வகுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானிய உணவு, நார் சத்து உணவு, பச்சை காய்கறிகள், பழங்கள் இவை உடல் நலம் மட்டுமல்ல மன நலத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

* வைட்டமின்-பி வகை மனநலத்திற்கும் மிகவும் அவசியம். சரியான நேரத்தில் உண்ணும் முறையை கண்டிப்பாய் பழகி கொள்ளுங்கள். இது மனநிலையை மிகச் சீராக வைக்கும்.

* காலை உணவு கண்டிப்பாய் உண்ண வேண்டும்.

* புரதம் ஒவ்வொரு வேளை உணவிலும் இருக்க வேண்டும். பருப்பு, சோயா போன்ற புரத வகைகள் மூளையினை நன்கு வேலை செய்ய வைக்கும்.

* பாஸ்ட்புட், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

* நாள் ஒன்றுக்கு சிறிய உணவாக நார்சத்து, சத்துணவு பழங்கள், காய்கறிகள் என ஐந்து முறை உண்ணுங்கள்.

* நிறைய தண்ணீர், அளவான காபி, டீ என எடுத்துக் கொள்ளுங்கள். டீயில் எலுமிச்சை கலந்து குடிப்பது மனநிலையை முன்னேற்றி, மறதித்தன்மையினை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

* வாழைப் பழம் மிக நல்ல உணவு. சத்து அதிகமிக்க இந்த உணவை `டயட்' இருப்பவர்கள் கூட எடுத்துக் கொள்வர்.

* யோகா பயிற்சி மனநிலையில் நல்ல முன்னேற்றம் தருவதால் இன்று வெளிநாடுகளில் யோகா பிரபலம் அடைந்துள்ளது. உடற்பயிற்சி உங்கள் நலம் காக்கும். நண்பன் என்பதினை உணருங்கள். ஒருவரின் மன உளைச்சல் அவருக்கு மனநோயாக மாறலாம். அதற்கு சில காலம் முன்பே அவர்களுக்கு சில அறிகுறிகள் தோன்றும்.

* தற்கொலை எண்ணம்.

* எதிலும் கவனம்இன்மை, அதிக மறதி.

* அதிக கோபம், எரிச்சல்.

* ஒரு நேரம் போல் ஒரு நேரம் இல்லாமை.

* தேவையற்று தன்னை சுற்றி இருப்பவர் மீது சந்தேகம்.

* எதிலும் ஒதுங்கி இருத்தல். இந்த அறிகுறிகளில் மனநல மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருத்துவம் இழந்த வாழ்வை மீண்டும் பெற வைக்கும்.
+