21/03/2014

சந்தனத் திலகமிடுதல் உடல் நலம் பெறுவதோடு - நறுமணம் வீசும் சந்தனம் ,காலம்காலமாக..?

சந்தனம்


நறுமணம் வீசும் சந்தனம் ,காலம்காலமாக , இறைவனுக்குரிய பூஜை பொருளாக இருந்து வருகிறது.

இயற்கையிலேயே மணம் வீசுவது மட்டுமன்றி ,உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது சந்தனம் .சந்தனத்தை மைபோல் அரைத்து இறைவனுக்கு சாற்றிய பின்னர்தான் மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

 சந்தனத்தை அரைத்து இறைவனுக்கு இடுவதால் மலையளவு புண்ணியம் தேடி வரும்.சந்தனத்தை நெற்றியிலும்,உடலெங்கும்
பூசிகொள்வதால் எண்ணிய நற்காரியங்கள் நிறைவேறும்.

சந்தனம் குளிர்ச்சியானது என்பதால் நெற்றியிலிடும்போது , இரு நெற்றிப் பொட்டுகளுக்கிடையே உஷ்ணத்தை குறைத்து, மூளையின் செயல்பாடுகளை தூண்டுவதோடு , துர்சக்திகள் நம்மீது படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சந்தனத் திலகமிடுதல் உடல் நலம் பெறுவதோடு, மூளையை குளுமையாக்கி மனதை தெய்வீக நினைவில் செலுத்தும்.அதன் நறுமணம் நம் மனதை இறை நினைவில் முழுவதுமாக நிறுத்த உதவுகிறது.

இயல்பாகவே மணம் நிறைந்தது சந்தனம்.சந்தனத்தை வழங்கிய இறைவனுக்கு அதையே அர்பணிப்பதன் மூலம்,எல்லாம் அவன் செயல் ,நமக்குரியது ஒன்றுமில்லை என்கிற இயற்கை தத்துவத்தை உணர்கிறோம்.

சந்தன மரங்களில் பலவகைகள் உண்டு.சித்தர்கள் ,மக்கள் நலம் கருதி ஆங்காங்கே நடுகின்ற சந்தனமரங்கள் அற்புத சக்தி கொண்டவை.பொதிகமலையில் இவற்றை அதிக அளவில் காணலாம்.

மலைப் பகுதியில் நெடிஉயர்ந்து வளர்ந்து ,விளைச்சல் முற்றி உறுதிபெற்று காணப்படுவது மலைச் சந்தனம் ஆகும். சமவெளிப் பகுதியில் வளர்வது நடுசந்தனம் .

பெரும் மழையாலும்,புயலாலும் இடம் பெயரும் சந்தனச் செடிகள் ஆங்காங்கே நிலை கொண்டு வளர்வது புயல் சந்தனமாகும்.

சப்தரிஷியினர் சந்தன மரங்களில் வாசம் செய்வதாக கூறபடுகிறது.

பொதுவாக சந்தன மரங்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் தான் முதிர்ச்சி பெறுகிறது .அதற்குள் பல பருவநிலைகளை கடந்து, ஒவ்வொரு நிலையிலும் வித விதமான அருள் சக்தியை பெறுகிறது.

 ரிஷி பால பருவம்,மணப்பருவம், புருஷப்பருவம், நடுப்பருவம் என்று பல வித பருவங்களை கொண்டது சந்தன மரம்.

சந்தன மரங்களை வெட்டுவதற்கு முன்பாக காப்புக்கட்டி , கலாகர்ஷணம் செய்து,சப்தரிஷிகளுக்கு பூஜை செய்து அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே வெட்ட வேண்டும்.

இளையாப்பு சந்தனம் என்பது சந்தன மரத்தை முதன் முதலில் வெட்டிய பின் அதில் கிடைக்கும் முதற்கட்டைகளை கொண்டு சந்தனம் அரைத்து  குழம்பாக்கி, எல்லை தெய்வத்திற்கு இடுவது.

சந்தன கட்டைகளை ஹோமங்களில் இட்டால் சப்தரிஷிகள் மிக மகிழ்ந்து அளவில்லா திருவருளை அருள்வார்கள். சந்தனமரத்தில் கணுமரம், குருத்தானம், மறைகுழம்பு சந்தனம், கனகப் பட்டை என பல பிரிவுகள் உண்டு.

இயற்கையிலேயே மணம் வீசும் தன்மை கொண்ட சந்தனத்தை கொண்டு ஆண்டவனை பூஜிபவர்களின் வாழ்க்கையிலும் சுகந்தம் வீசும்.

சந்தன மரத்தில் சப்த ரிஷிகள் வாழ்வதால் சந்தனம் அரைக்கும் போது அத்ரி,பிருகு, குத்ஸர் ,வசிஷ்டர் ,கௌதமர்,காஸ்யபர் , ஆங்கிரஸர் என்ற ஏழு ரிஷிகளின் நாமங்களை ஜபித்து அவர்கள் ஆசி வேண்டி சந்தனம் அரைத்திடல் வேண்டும்.

+

இவைகளிருக்க வாழ்க்கையில் இன்னல்கள் ஏது..!



புளியிருக்க புண்ணேது..?

புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.


பால்கட்டுக்கு பாசிப்பயிறு

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.


மயிர்கறுக்க மருதோன்றி

மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.


வாந்தி நீக்கும் நெல்லி

நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.


படர்தாமரைக்கு

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.


பல் ஈறு, வீக்கம், வலிக்கு

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.


மலச்சிக்கலுக்கு

பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.


மூலம் அகல

ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.


முகப்பொலிவிற்கு

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.


சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
+

சுரைக்காயில் இருக்கு சூப்பர் பலன்..! - பசியை போக்கும் பயறு வகை..!

சுரைக்காயில் இருக்கு சூப்பர் பலன்..! 


சுரைக்காயை பொடியாக நறுக்கி, உப்பு, சீரகம், மஞ்சள்தூள், ஒரு தக்காளி சேர்த்துவேக வைத்து, வெந்தப் பயத்தம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. உடல் சூட்டை குறைக்கும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று புண் சரியாகும்.

தாய் பால் சுரக்கும். மூல நோய் விலகும். ரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு அருமருந்து. உடல் பருமனைக் குறைக்கும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சுரைக்காய் சாறு அருந்தலாம்.


பசியை போக்கும் பயறு வகை..! 


எல்லோருக்குமே பயறு ஏற்றது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்குதான் அடிக்கடி அதிகப் பசி எடுக்கும். இதனால் திடீர் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

பசியைப் போக்க, சர்க்கரை உயராமல் தடுக்க பயறு வகைகள்தான் பெஸ்ட்.
முளைகட்டிய பாசிப்பயறு (அ) கொண்டைக்கடலை இவற்றை ஊற வைத்து சுண்டலாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

அதீத பசியை குறைக்கும். வயிறும் நிரம்பும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கும்.
+

வாழ வைக்கும்... வாழைப்பழம்...! - உங்களுக்காக...



காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது.

 வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக்கூடியவையே.

இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம்..

மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

பேயன் வாழைப்பழம்- அம்மை நோயால் குடலில்

ரஸ்தாலி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சு, வேக்காட்டை முறிக்கும் தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.
+

நரம்புகளை உறுதியாக்கும் பலாப்பழம் - ஆய்வில் தகவல்...!


முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

8. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

9. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

10. பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.
+

ஜலதோசம், மூக்கடைப்பு நீங்க.. - இதப்படிங்க...!



ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.. உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் சேர்ந்து விடும்.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.

இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும். மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.

அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு.

இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலக்கவும். மண்ண்டையைச் சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம்.. மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு வேண்டாம்.

நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையைப் பூசவும். 1 மணி நேரம் நன்றாக தூங்கவும். மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்து விடும்.
+

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி..! - உங்களுக்காக..



நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது.

காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான்.

முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் தசிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.

முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது

அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
+

எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள்…ஆய்வில் தகவல்



நல்லா கலரா, அழகா இருக்கிற பெண்ணா பாருங்க என்று கூறிய காலம் போய் இன்றைக்கு புத்திசாலியான பெண்தான் வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், “தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை, உலகின், 30 நாடுகளை
 சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. இதன் மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறிவான பெண்கள்

சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ இரண்டையுமே பேலன்ஸ் செய்வதில் புத்திசாலிப் பெண்களுக்குத்தான் தனி திறமை உண்டு. அழகுப் பதுமைகளாக இருக்கும் பெண்கள் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அழகு என்பதை விட புத்திசாலியான பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ஆண்கள் கூறியுள்ளனர்.

அழகான ஆண்கள்

அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். நல்ல உடற்கட்டுடன், அழகாக தோற்றம் அளிக்கும், ஆண்களுக்குத்தான் தற்கால பெண்கள், அதிக மதிப்பெண்கள் தந்துள்ளனர். ஆண்களுக்கு, நிகராக, பெண்களின், பொருள் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆண்களின் பணத்தை நம்பி, வாழ வேண்டிய அவசியம் பெண்களுக்கு குறைந்து போய் உள்ளதால், அவர்களது எதிர்காலம் பற்றிய, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரிசுகளுக்கு, தன் கணவனால், வசதியான எதிர்காலத்தை தர முடியுமா என்றும், இக்கால பெண்கள் நினைப்பதில்லை.

பெண்களிடம் ஏற்பட்டு வரும், இந்த மாற்றம் காரணமாக, இனி ஆண்கள், “பணம்… பணம்’ என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்காது. தம் உடலை அழகாக பேணி வந்தாலே போதும் என்ற நிலை உருவாகி வருவதால், ஆண்கள் இனி, நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இவ்வாறு சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகிறது என்பதையே இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள்…ஆய்வில் தகவல் - See more at: http://www.cinebeeps.com/archives/16478#sthash.TIzcj7jm.dpuf
+

ஷாப்பிங்கில் கணவன்,மனைவிக்கிடையே சண்டை வராமலிருக்க - இப்படி செய்ய வேண்டும்...!



வீட்டில் செய்யும் வேலைகளிலேயே மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மளிகைப் பொருட்களுக்கு செய்யும் ஷாப்பிங் தான். இந்த பிரச்சனை அனைத்து மாதமும் தவறாமல் வந்துவிடும்.


பிரச்சனை என்றதும் பெரிய பிரச்சனை என்று நினைக்க வேண்டாம், அந்த பொருட்கள் வாங்க சென்றால், கையில் இருக்கும் பணம் செல்லும் வழியே தெரியாமல் போய்விடும். ஆனால் சில வீட்டில் இருக்கும் பெண்கள், இந்த மளிகைப் பொருட்களை எளிதில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி அழகாக வாங்கிவிடுவர். இதற்கு காரணம் அவர்கள் போடும் ப்ளான் தான்.


ஏனெனில் அந்த மாதியான ப்ளான் போட்டால், மாத இறுதியில் எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த ப்ளான் சரியாக இல்லையெனில் ஒரு வேலைக்கு இரண்டு வேலை என்பது போல் ஆகிவிடும். அதாவது ஒரு பொருளை வாங்கி, மற்றொரு முக்கியமான பொருளை வாங்காமல், பின் மறுமுறையும் கடைக்குச் செல்வோம். அவ்வாறு செல்லும் போது, பெண்களின் கை என்ன சும்மாவா இருக்கும். ஒரு பொருளுக்கு இரண்டு பொருளாக வாங்கிவிவோம். பின் பணம் என்ன நீண்ட நாட்களா இருக்கும்.

எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பணத்தை சேகரிக்கலாமே!!!


முன்னரே ப்ளான் போடுதல்


எப்போதும் மளிகைப் பொருட்கள் வாங்க போகும் முதல் நாளே என்ன வாங்க வேண்டும் என்று யோசித்து லிஸ்ட்டை எழுதிக் கொள்ள வேண்டும். இதனால் எந்த ஒரு பொருளையும் மறக்காமல் இருப்பதோடு, நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறும் வாங்கலாம்.


பட்டியலை தயாரித்தல்


வாங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலைப் போடும் போது இரண்டு வகையான பட்டியலை தயாரித்தல் நல்லது. ஏனெனில் முதல் முறை போடும் போது எதையாவது மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் பட்டியலில் அனைத்தையும் எழுதிவிட்டு, பின்பு மற்றொன்றில் வேண்டியவற்றை எழுதினால் நமது பட்ஜெட்க்கு ஏற்றவாறு இருக்கும்.

பட்டியல் பேப்பரை கையில் வைத்திருத்தல்


ஷாப்பிங் போகும் போது கையில் அந்த பட்டியலையும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பொருளையும் வாங்கியப் பின்பு அதில் ஒரு டிக் மார்க் போட்டுக் கொண்டால், எதை வாங்கினோம், எதை வாங்கவில்லை, சரியாகத் தான் வாங்கினோமா என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

வாழ்க்கைத்துணையுடன் சரியான ஒருங்கிணைப்பு


கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க செல்லும் போது சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனில் பின்பு ஷாப்பிங் செலவு தான் அதிகரிக்கும். பின் தேவையில்லாத சண்டைகள் வரும். ஆகவே இருவரும் ஒருங்கிணைந்து பட்டியலிட்டு வாங்கினால், பொருட்களும் தவறாமல் இருக்கும், பணமும் மிச்சமாகும்.


குடும்பத்தில் ஆலோசிக்க வேண்டும்


ஷாப்பிங் லிஸ்ட்டை தயாரிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. அவ்வாறு தயாரிக்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, பின்னர் தயாரித்தால், மாதத்தின் இறுதியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

கிச்சனை பார்த்தல்


எந்த ஒரு மளிகைப் பொருளையும் வாங்கும் முன்பு, கிச்சனுக்கு சென்று பார்த்து, பொருட்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை தேவையில்லாமல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா? மேலும் தேவையில்லாமல் பொருட்களை சேகரித்து வைப்பது வேஸ்ட் தான்.

பட்டியலை வகைப்படுத்தவும்


மாதாமாதம் மளிகைப் பொருட்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. பால், காய்கறிகள் மற்றும் பல பொருட்கள் வாரம் ஒரு முறை அல்லது தினமும் வாங்க வேண்டியிருக்கும். ஆகவே அவற்றையும் மனதில் வைத்து மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை எழுத வேண்டும்.

பட்ஜெட் போடுதல்


அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ப்ளான் போடும் முன், பட்ஜெட்டை பார்க்க வேண்டும். சொல்லப்போனால் பட்ஜெட்டைப் பொறுத்து ப்ளான் போடுவது நல்லது. இதனால் பணத்தை அளவாக செலவழிக்கலாம்.
+

சரும அழகை காக்கும் வேப்பிலை - மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை..!



வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரம் நமக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

* ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.


* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.
+

கலக்கும் காட்டன் டயட்…பின்னணி பயங்கரம்..! - கண்டிப்பா படிங்க..?



கொழுக் மொழுக் தோற்றத்துடன் நடிகையாக அறிமுகமானவர் அவர். அவரது முதல் படப் பாடலை இப்போது பார்த்தாலும், பிதுங்கி நிற்கிற தனது வயிற்றை சேலையால் இழுத்து மறைத்துக் கொண்டு, கவனமாக நடனமாடியிருப்பதைக் கவனிக்கலாம். எந்த வயிறு வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைத்தாரோ, இன்று அதே வயிறுதான் அந்த நடிகையின் மிகப்பெரிய பிளஸ்.

திரையுலகில் தனது மூன்றாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கி, முன்னணியில் இருக்கிற அவர், இப்போதைய படங்களில் வயிறும் இடுப்பும் தெரிகிற மாதிரியான காஸ்ட்யூம்களையே அதிகம் விரும்புகிறார். இருக்கா, இல்லையா என்கிற அளவுக்கு அவர் இடை மெலிந்ததே காரணம்.

நடிகைகளின் எடைக் குறைப்புக்குப் பின்னணியாக காலங்காலமாக சொல்லப்படுகிற அறுவைசிகிச்சையோ, மணிக்கணக்கான உடற்பயிற்சியோ இந்த நடிகைக்கு உதவவில்லை. பின்னே? காட்டன் டயட்..! யெஸ்… சாட்சாத் பஞ்சேதான்..!

காலை உணவுக்கு ஒரு கப் பஞ்சு, மதிய உணவுக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு, இரவு உணவுக்கும் அதே மாதிரி கொஞ்சம் பஞ்சு. ஆரஞ்சு ஜூஸில் முக்கியெடுத்த பஞ்சை இப்படி மூன்று வேளைக்கும் முழுங்கியதே அந்த நடிகை, கொடியிடையாளாக மாறியதன் ரகசியமாம். நம்மூர் நடிகைகளுக்குத்தான் இது புதுசு. ஹாலிவுட்டில் காட்டன் டயட்டை பின்பற்றி, ஒல்லிக்குச்சி உடல்வாகுக்குத் திரும்பிய நடிகைகளும் மாடல்களும் ஏராளம்!

டயட்டீஷியன்களும் எடைக் குறைப்பு ஆலோசகர்களுமே இந்த காட்டன் டயட்டை தமது வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் என்பது தான் ஜீரணிக்க முடியாத சேதி. அதென்ன காட்டன் டயட்? அது அப்படி என்னதான் செய்யும்? நல்ல தரமான பஞ்சாக வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அதை சின்னச் சின்ன பந்துகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம். கூடவே கொஞ்சம் ஜெலட்டின் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு. அதில் பஞ்சு உருண்டைகளை முக்கியெடுத்து அப்படியே ‘லபக்’க வேண்டியதுதான்!

காட்டன் டயட்டிலேயே இரண்டு வகைகள் உண்டு. வேறு எந்த உணவையுமே கண்ணால் கூடப் பார்க்காமல், 3 வேளைகளுக்கும் இதையே உணவாக உட்கொள்கிறவர்கள் ஒரு ரகம். இது சைஸ் ஸீரோ உடல்வாகு வேண்டுமென்போரின் சாய்ஸ். சைஸ் ஸீரோவெல்லாம் வேண்டாம். உடல் மெலிந்தால் போதும் என்போர், ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கு முன்பும், கொஞ்சம் பஞ்சு உருண்டைகளை விழுங்க வேண்டுமாம். அப்படி உள்ளே போகிற பஞ்சானது, இரைப்பையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதால், ஆசைப்பட்டாலுமே ஒரு வாய் சாப்பாடு கூட அதிகமாக உள்ளே இறங்க வாய்ப்பில்லை.

விருப்பமான உணவைத் தியாகமும் செய்யத் தேவையில்லை, அதே நேரம் அதிகமாகவும் எடுத்துக் கொள்ள முடியாததால், தானாக உடல் மெலியத் தொடங்கும். பஞ்சு என்பது நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு பொருள் என்பதால், எடைக்குறைப்புக்கு உதவும் என்பது பலரது நம்பிக்கை. கலோரி உடலில் சேராது. வயிறும் நிறைந்த உணர்வு ஏற்படும். உடலை வருத்தாமல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த பஞ்சு உணவின் பின்னணி ரகசியம்.

வெளிநாட்டு அழகிகளிடம் இருந்து, நம்மூர் பெண்கள் வரை பிரபலமாகிவிட்ட இந்த பஞ்சு டயட் ஆரோக்கியமானதுதானா? கல்லைத் தின்றாலும் கரைகிற வயதில், பஞ்சைத் தின்று கொழுப்பைக் கரைக்க நினைப்பது சரிதானா? இரைப்பை சிகிச்சை மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹாவிடம் பேசினோம்.

‘‘பஞ்சு என்பது உடுத்தத்தான் இதமானதே தவிர, உண்பதற்கு அல்ல. பஞ்சை உருட்டி அப்படியேவோ, பழச்சாறில் முக்கியோ விழுங்குவதைப் பற்றிக் கேள்விப்படுகிற போதே நமக்கெல்லாம் உடம்பு நடுங்குகிறது. உலர்ந்த பஞ்சை விழுங்குவோருக்கும் சரி, பழச்சாற்றில் நனைத்து விழுங்குவோருக்கும் சரி… இது நிச்சயம் பேராபத்துகளைத் தரும். அப்படியே விழுங்கும் போது, பஞ்சின் துகள்கள் நுரையீரலுக்குள் செல்லலாம். அதை வெளியேற்றும் முயற்சியில் இருமல் வரும். அதன் தொடர்ச்சியாக சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு, நிமோனியா, மூச்சுக் குழல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம்.

ஒருவேளை வெற்றிகரமாக பஞ்சு உருண்டைகளை விழுங்கி விட்டார் என வைத்துக் கொண்டாலும் பிரச்னைதான். குடல் அடைப்பு, பெருங்குடல் முறுக்கிக் கொள்வது, குடல் அழுகிப் போவது போன்றவை ஏற்படலாம். இவற்றின் தொடர்ச்சியாக கடுமையான வயிற்றுவலி, அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு அதன் தீவிரம், அடுத்தடுத்து பக்க விளைவுகள் என தொடர் பிரச்னைகளுக்கு வித்திடலாம். சில நேரங்களில் பிளீச் செய்யப்பட்ட பஞ்சை உட்கொள்ளும் போது, அதன் தீவிரம் இன்னும் மோசமாக இருக்கும்.

கலோரிகள் ஏதுமில்லாததால், பஞ்சு உணவை உட்கொள்வோருக்கு சத்துக் குறைபாடு ரொம்பவே அதிகமாக இருக்கும். அவர்களது வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் பாதிப்படையும். காட்டன் டயட்டை பின்பற்றியதால், உயிரையே இழந்திருக்கிறார் வெளிநாட்டில் ஒரு பெண். எடைக்குறைப்பு என்பது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கிற சமாசாரமில்லை என்பதை முதலில் எல்லோரும் உணர வேண்டும். கஷ்டப்படாமல் எந்த விஷயத்திலும் பலனை எதிர்பார்க்க முடியாது.

பருமன் அதிகமுள்ளோர், மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தான் எடைக் குறைப்புக்கான பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத தீர்வுகள். அவை பலனளிக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா எனத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்…’’
+

மாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும் - உங்களுக்காக..!



உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியே கமான இரத்தக்குழாய்கள் இருக்கின்றன.

அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற் பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த ஓட் டம் தடைப்பட்டு, அந்தத் தசைகள் பழுத டைவதையே மாரடைப்பு என்கிறோம். ஒரு முறை அந்தத் தசைகள் பழுதாகி மாரடைப்பு ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத் தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன், அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுப்பதே சிறந்தது.

மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய கார ணிகளுள் மிக முக்கியமானவை ஆறு.

1. புகையிலை பாவனை.

2. அதீத இரத்த அழுத்தம்

3. நீரிழிவு நோய்

4. கொழுப்பின் அளவு

5. தொப்பை மற்றும் உடல் பருமன்

6. மன உளைச்சல்

சிகரெட்டில் நிக்கோட்டின் உட்பட பல நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நிக்கோட்டின், இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது. இதனால்தான் புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுமட்டுமல்ல. புகைபிடிப்பதால், மேலே கூறப்பட்ட ஏனைய ஐந்து காரணிகளும் தாமாகவே எட் டிப் பார்க்கின்றன.

இரத்த அழுத்தம் ஒரு மௌன உயிர் கொல்லி. ஏனெனில், இது தம் உடலில் இருக்கிறது என்பதை எவராலும் இலகுவாக அறிந்துகொள்ள முடியாது. அறிகுறியும் காட்டாது. ஆனால் இது விஸ்வரூபம் எடுக் கும்போது, உடனடியாக உடலின் ஐந்து முக்கிய உறுப்புகளான மூளை, கண்கள், இருதயம், சிறுநீரகம் மற்றும் இரத்தக் குழாய்கள் என்பவற்றைத் தாக்கும். ஆகை யால், சீரான கால இடைவெளியில், இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள் வதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத் தத்தில் அதிக சர்க்கரை சேருமானால், அது இருதயத் தசைகளைப் பாதிக்கலாம். அல் லது இருதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தலாம். இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம். இவை மாரடைப்பை உண்டாக்கிவிடும்.


அடுத்து கொழுப்பு. கொழுப்பில் ஐந்து விதமான கொழுப் புகள் உண்டு. அவற்றுள், எல்.டி.எல். என்பது (Low-density lipoprotein) கெட்ட கொழுப்பு. எச்.டி.எல். என்பது (High-density lipoprotein) நல்ல கொழுப்பு. உட லில் நல்ல கொழுப்பின் அளவு, கெட்ட கொழுப்பைவிட அதிகமாக இருக்க வேண் டும். இதற்கு மிக அவசியமானவை, உண வுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி.

உண வுக் கட்டுப்பாட்டைப் பொறுத்தளவில், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த பதார்த் தங்களை விலக்கவேண்டும். சமையலுக்காக சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன் றவற்றைப் பயன்படுத்தலாம். அதுவும் இவற்றை வாரந்தோறும் ஒன்று மாற்றி ஒன் றைப் பயன்படுத்துவதால், இவை ஒவ் வொன்றிலுமுள்ள தனித்துவமான குணங் கள் பூரணமாகக் கிடைக்கும். ஆனால் எந்த எண்ணெய் ஆயினும் பொரிப்பது ஆகாது.


இறுதியாக மன உளைச்சல். நீங்கள் வேகமாக நடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பத்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும்போது, இரத்த அழுத்தம், சாதாரண நிலையான 120லிருந்து படிப்படியாக 160, 180 என்று கூடிச் செல்லும். ஆனால், உங்க ளுக்குள் ஏற்படும் கோபம் அல்லது கவலை யால், உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நொடி யில் உச்சத்தை எட்டுகிறது. சாதாரண நிலை யில் இயங்கும் இருதயம், சடுதியாக வேக மாக இயங்கவேண்டி ஏற்பட்டால், அது செயலிழக்கிறது.

இதனால்தான், பலரும், கடுமையான மன உளைச்சலின்போது, இரு தயம் செயலிழந்து மரணத்தைத் தழுவுகி றார்கள்.இதைத் தவிர்ப்பதற்கு மனதுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். யோகா, தியா னம், இனிமையான இசை, நேர்மறைச் சிந் தனை கள் என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டால், மன உளைச்ச லால் மாரடைப்பு என்ற ஒன்று உங்களை ஒருபோதும் அண்டாது.
+

நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம் - அரியத் தகவல்களுடன்...!



கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான்.

அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

 மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை கொண்டது.

இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற் படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.

மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.
+