14/09/2014

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..!

எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.

அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) உலக முதல் உதவி தினமாகும்.

இதை முன்னிட்டு நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...

ஆஸ்த்துமா:-

கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல்.

சிகிச்சை:-

சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.

மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

மின்சாரம் தாக்குதல்:-

சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.

சிகிச்சை:-

சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

நீரில் மூழ்குதல்:-

சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும்.

இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும்.

மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

எலும்பு முறிவு:-

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும்.

சிகிச்சை :-

அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.

கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும்.

சுளுக்கும் - சதை பிடிப்பும்:-

வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.

சிகிச்சை:-

ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும்.

பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.

மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு):-

கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.

சிகிச்சை:-

கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.

கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம்.

பக்கவாதம்:-

மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும்.

சிகிச்சை:-

இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும்.

இதயக் கோளாறுகள்

மார்பு வலி:- மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும்.

மேல் மூச்சு வாங்கும். சிகிச்சை:-உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும்.

அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.

இதயத்தில் திடீரென்று கோளாறு:-

அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும்.

தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும்.

சிகிச்சை:-

மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும்.

பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும்.

நாய்கடி:-

வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.

சிகிச்சை:-

கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.

நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.

நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:-

வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

சிகிச்சை:-

உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.

நீரிழிவு வியாதி :-

சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.

சிகிச்சை:-

மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.

சர்க்கரை குறைந்து விட்டால்:-

வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.

சிகிச்சை:-

உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம். 
+

காரமான மிளகாய் வகைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்...!

அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பல்கிப் பெருகியுள்ள மிளகாய் வகையின் ஆதாரமாக இருப்பது தான் மிளகுகளாகும். பார்த்தாலே காரம் தூக்கும் இந்த வண்ணமயமான தாவரத்திலிருந்து பலரும் விலகியிருந்தாலும், அதன் மிளகுத் தூளை - அதுவும் சூடாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பது உண்மை!

நார்ச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள தாதுப்பொருட்களை கொண்டிருக்கும் மிளகு, எடை குறைப்புக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய சைவ உணவாகும். கோஸ்ட் பெப்பர்களைப் போல, மிளகை சூடாக வறுத்து சாப்பிட்டால், அது எடை குறைப்பு முயற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும். ஏனெனில், உடலின் செயலூக்கத்தை மேம்படுத்தவும் மற்றும் குறைவான உணவை சாப்பிட்டு, கொழுப்பை எரிக்கவும் இது உதவும்.

மிளகு ஒரு மென்மையான மற்றும் பருவ கால சைவ உணவாகும். மிளகுச் செடியை வளர்ப்பதற்கு அதிகமான வெப்பநிலை தேவைப்படும் மற்றும் அது மெதுவாகவே வளரும். இவற்றை உணவுக்காகவும், வாசனைப் பொருளாகவும் மற்றும் அலங்காரத்திற்காகவும் கூட வளர்க்கிறார்கள்.

இப்போது மிளகாய் வகைகளின் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய கருவியாக இருப்பது மூலப்பொருள் P என்பதாகும். இதுதான் உடலில் எரிச்சலையும் மற்றும் வலியையும் ட்ரைஜெமினல் நரம்பிற்கு கொடுத்து, உடலை உணரச் செய்து வருகிறது. ட்ரைஜெமினல் நரம்பை (Trigeminal Nerve) அடிப்படையாக கொண்டு தான் நமது உடல், உடற்கூடு மற்றும் சுவாச துவாரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இயக்கமும் உள்ளது. ஒருமுறை நரம்பின் நார்களுக்குள் இந்த மூலப்பொருள் P புகுந்து கொண்டால், தலைவலி மற்றும் சைனஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற மூலப்பொருள் கூட்டுத் தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலி ஆகியவற்றிற்கு நிவாரணமாக இருக்கும் என்று மருத்துவ பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்களின் இரத்தம் மற்றும் மூட்டுகளை இணைக்கும் சினோவியல் திரவம் ஆகியவற்றில் மூலப்பொருள் P-யின் அளவு அதிகரித்து விடுகிறது. கேப்சைசின் கலந்துள்ள கிரீமை சாப்பிடுவதன் மூலமான இந்த மூலப்பொருள் P உற்பத்தியாவதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

திறமையான பாக்டீரியா எதிர்ப்பு குணத்தையும் மற்றும் நீண்ட காலத்திற்கு சைனஸ் (Sinusitis) வருவதை தவிர்க்கும் குணத்தையும் கேப்சைசின் பெற்றுள்ளது. இது ஒரு சுத்தமான மற்றும் இயற்கையான வேதிப்பொருளாக இருப்பதால், நாசித் துவாரங்களின் அடைப்புகளை சுத்தம் செய்யவும் மற்றும் சைனஸ் தொடர்பான அலர்ஜிகளையும் சமாளிக்க உதவும். கேப்சைசினை (Capsaicin) தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பை நீண்ட நாட்களுக்கு தவிர்த்திட முடியும்

மிளகில் உள்ள கேப்சாய்சின் எரிச்சலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் குணத்தைக் கொண்டுள்ளது. மேலும், காரமான மிளகில் வைட்டமின் சி-யும் நிரம்பியுள்ளது. எனவே, காரமான மிளகை வலியுள்ள மூட்டுகளிலும், திறந்திருக்கும் காயங்களிலும் மற்றும் இரத்த இழப்பைத் நிறுத்துவதற்கும் நேரடியாகப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பணியை மிளகு செய்வதால், எரிச்சல் மற்றும் வேதனையை குறைத்திட முடியும். பல் வலி இருந்தால், கயென்னே மிளகை எடுத்து எண்ணெயில் போட்டு வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பருத்தி துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். பெப்டிக் அல்சர், டிஸ்பெப்ஸிய மற்றும் நியோரோபதிகளில் பல்வேறு நபர்களும் காரமான மிளகை பயன்படுத்துகிறார்கள். சிலி மிளகை வைத்து தயாரிக்கப்படக் கூடிய பிளாஸ்டர்கள் மற்றும் மாவு கட்டுகள் உள்ளன. உங்களுக்கு சாதாரண ஜலதோஷமோ, மூச்சுக்குழாய் அழற்சியோ வந்திருந்தால், சிறிதளவு மிளகை எடுத்து சிக்கன் சூப்பில் போட்டு சாப்பிடுங்கள்.

டியூக் பல்கலைக்கழகத்தில் அண்மையில் வாய்வு பிரச்சனைகள் பற்றி செய்யப்பட்ட ஒரு ஆய்வில், கேப்சைசினுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான குடல்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எரிச்சலூட்டும் குடல் நோய் (Inflammatory Bowel Disease) உண்டாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நரம்பு செல் தேவையாக இருப்பதை டியூக் பல்கலைக்கழக குழுவினர் கண்டறிந்துள்ளனர். எரிச்சலின் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும் வலிகள், அசௌகரியங்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றின் ஒட்டுமொத்த பெயராக எரிச்சலூட்டும் குடல் நோய் உள்ளது.

புற்றுநோய்க்கான செல்களை தானாக அழிந்து விடுமாறு தூண்டும் குணம் கேப்சைசினுக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் சுமார் 80 சதவீதத்தையும், புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகளையும் கேப்சைசின் கொண்டு குணப்படுத்த முடியும். 5 இல் 1 பகுதியினர் இந்த நோய்க்கு நிவாரணம் பெறமாலேயே இறந்து விடுகின்றனர். மேலும், புரோஸ்டேட் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் பொருட்டாக, கேப்சைசின் மாத்திரைகளை பயன்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர்.

ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்தவும் மற்றும் டையாபடிக் நியூரோபதிக்கு நிவாரணம் தரவும் மிதவெப்ப மண்டலத்தைச் சேர்ந்த ஒரு மிளகு வகை உதவுகிறது. மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய நியூரோபெப்டைட் என்ற மூலப்பொருள் P-யை தடுக்கக் கூடியதாக அறியப்படுகிறது கேப்சைசின். நரம்புகள் புடைத்துக் கொள்ளவும் கூட இந்த மூலப்பொருள் P காரணமாக இருப்பதால், அதன் காரணமாக தலைவலியும், சைனஸ் அறிகுறிகளும் வரலாம். கூட்டு தலைவலிகள், ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலிகளை கேப்சைசின் மிகச்சரியாக குறைத்து விடுவதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

எரிச்சலுடன் தொடர்புடைய குடல் நோய்க்கு கேப்சைசின் நிவாரணமளிப்பதை டியூக் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. ஹெச்.பைலோரி போன்ற பாக்டீரியாக்களையும் கேப்சைசின் அழித்து விடுவதால், வயிற்று புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

காரமான மிளகுகள் உடலின் இயக்கத்தை எளிதில் தூண்டி விடுவதால், கொழுப்புகளை எரிக்கும் தெர்மோஜெனசிஸ் ஏற்படுகிறது என்று 'தி ஜர்னல் ஆஃப் பையலஜிகல் கெமிஸ்ட்ரி' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற வேதிப்பொருள் நமது உடலுக்குள் இருக்கும் கலோரிகளை எரித்திட உதவுகிறது. சிறிதளவு முட்டையுடன் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிட்டால் நமது உடலின் இயக்கத்தை சுவையுடன் தூண்டிட முடியும்.

கொழுப்புகளின் அளவு, ட்ரைகிளிசரைட்கள் மற்றும் பிளாட்டலெட் அக்ரகேஷன் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்முடைய இதயத்தைப் பாதுகாக்கும் பணியை கேப்சைசின் செய்கிறது. இரத்தம் உறைவதற்கு அவசியமாக தேவைப்படும் நார்களை நம்முடைய உடல் பிரிப்பதற்கும் கேப்சைசின் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களில், மிளகை தங்களுடைய உணவில் சாதாரணமாக பயன்படுத்தி வருபவர்கள் யாருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவில்லை என்பது உண்மை. இவ்வாறு மிளகை பயன்படுத்தாக கலாச்சாரங்கள் உள்ள இடங்களில் இதய நோய் சகஜமாக இருப்பதும் உண்மை!

தோட்டங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படும் பூச்சி விரட்டியாகவும் காரமான மிளகுகள் பயன்படுகின்றன. இதன் முக்கியமான மூலப்பொருளாக கேப்சைசின் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரத்துடனும் மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறையினரும் கேப்சைசின்னை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த அனுமதிக்கின்றனர். 1962-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேப்சைசின் பொருள், நாய்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு விடுப்பதாக இருந்தது.

புறஊதாக்கதிர்களின் மோசமான தாக்குதல்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் பணியை இனிப்பு மிளகுகள் செய்கின்றன. புறஊதாக்கதிர்கள் தோலின் தளத்தை பாதித்து, எரிச்சலைத் தூண்டுகின்றன. மேலும், மூப்படைவதையும், தோல் புற்றுநோய் வருவதையும் தூண்டுகின்றன.

இனிப்பு மற்றும் காரமான மிளகுகள் ஆகிய இரண்டிலுமே வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, கோலைன் மற்றும் போலியோட் ஆகியவை நிரம்பியுள்ளன. இவற்றில் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால், நார்ச்சத்துக்களை அள்ளித் தரும் ஆதாரங்களாக இவை உள்ளன.

ப்ரீ-ராடிக்கல்களை எதிர்க்கக் கூடிய மற்றும் இதயம், புற்றுநோய் மற்றும் நியூரோ டிஜெனரேட்டிவ் நோய்களுக்கான வாய்ப்பை குறைக்கக் கூடிய பைட்டோ கெமிக்கல்களை இனிப்பு மற்றும் காரமான மிளகுகள் கொண்டுள்ளன.

காரமான உணவினால் வாய்வு தொல்லை ஏற்படும் என்ற எண்ணத்திற்கு தடை போடுங்கள்; சில வகையான வாய்வு பிரச்சனைகளுக்கு தகுந்த நிவாரணமாக காரமான மிளகுகள் உள்ளன. கேப்சைசின் அஜீரணத்தை ஏற்படுத்தும் ஹெ.பைலோரியை அழித்து விடுகிறது. இது போன்ற நேரங்களில், பாதிக்கப்பட்ட வயிற்றை பாதுகாக்கும் வகையில் சாறுகளை உற்பத்தி செய்யவும் கார மிளகு தூண்டும்.
+

எலுமிச்சையின் அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள்..! - இதோ உங்களுக்காக..

பெரும்பாலான இந்திய உணவுகளில் எலுமிச்சையானது உணவின் சுவையை அதிகரிக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் எலுமிச்சையை ஜூஸ் செய்து அருந்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி எலுமிச்சை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஏனெனில் எலுமிச்சையில் ஃப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. மேலும் எலுமிச்சையானது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியதும் கூட.

இப்போது எலுமிச்சையில் நிறைந்துள்ள அந்த அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போமா!!!

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

எலுமிச்சையானது உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனை குடித்து வந்தாலோ அல்லது எலுமிச்சை துண்டை அவ்வப்போது வெறும் வாயில் தின்று வந்தாலோ, உடலின் வெப்பநிலையானது குறையும்.

இரத்த நாளங்கள் நன்கு வலிமையாக இருப்பதற்கு வைட்டமின் பி (Vitamin P) என்னும் பயோ ஃப்ளேவோனாய்டு மிகவும் அவசியம். இத்தகையது எலுமிச்சையில் அதிகம் இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வந்தால், உடலின் உள்ளே ஏற்படும் இரத்தக் கசிவைத் தடுக்கலாம்.

காலரா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து விரைவில் குணமாக எலுமிச்சை ஜூஸ் பெரிதும் உதவியாக உள்ளது. ஏனெனில் எலுமிச்சையானது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள வைரஸ்களை அழித்து வெளியேற்றுகிறது.

வாத நோய் மற்றும் நாள்பட்ட மூட்டு வலியால் அவஸ்தைப்படுவர்களுக்கு, எலுமிச்சை நல்ல நிவாரணத்தைத் தரும். ஏனென்றால் எலுமிச்சை ஜூஸை குடிப்பதால், அவை நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடலை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலுமிச்சையில் பொட்டாசியம் இருப்பதால், அவை உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

எலுமிச்சைக்கு நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடும் குணம் உள்ளது. இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அமிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, தொண்டையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளானது நீங்கும்.

எலுமிச்சையின் மற்றொரு சிறப்பான நன்மை தான் பல் வலியைப் போக்குவது. தினமும் எலுமிச்சையைக் கொண்டு ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், அவை ஈறுகளில் வரும் இரத்தக்கசிவைத் தடுக்கும். மேலும் இது வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடித்தால், அவை காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றில் இருந்து சிறந்த நிவாரணம் அளிக்கும்.

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த நன்மை தான், வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் எலுமிச்சையை மிஞ்ச வேறு எதுவும் இல்லை.

எலுமிச்சையின் தோலில் மூளையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பைட்டோ நியூட்ரியண்ட் உள்ளது.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், பித்த கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே நீங்கள் மேற்கூறிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டிருந்தால், எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள்.

எலுமிச்சை குடலியக்கத்தை அதிகரிப்பதுடன், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தாலும், எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் எலுமிச்சையில் ஆரோக்கியமான கண்களுக்கு தேவையான வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது.

உங்களுக்கு தெரியுமா, எலுமிச்சையில் 22 புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது. இதனால் எலுமிச்சையை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால், அவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

+