04/09/2014

ஆண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவது ஏன்..? - இதைப்படிங்க...

நடுத்தர வயதினை அடையும் ஒரு மனிதன் பல ஆரோக்கிய குறைவுகளுக்கு ஆளாகின்றான். ஆய்வு கூறும் உண்மையானது கல்யாணம் ஆன ஆண்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாத ஆண்கள் அதிக நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது தான்.

திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப பந்தம் என்ற காரணம் அவர்களை உடல் நலனை காக்கின்றதாம். திருமண ஆகாத ஆண்கள் முறையான உணவு எடுத்துக் கொள்வதில்லை. முறையான ஆர்வத்தினை வாழ்வில் கொள்வதில்லை.

அநேக ஆண்களுக்கு இது நோயில் கொண்டு முடிகின்றது. 25 வயதில் திருமணம் புரிபவர்கள் அதற்கு முன் குறைந்த வயதில் திருமணம் புரிபவர்களை விட அதிக காலம் வாழ்கின்றனர் என ஆய்வு கூறுகின்றது.

கணினி, மடிக்கணினி, செல்போன், செல்போனில் விளையாட்டு என நீண்டு கொண்டே செல்லும் நவீன உபயோகப் பொருட்கள், போதைப் பொருட்கள் போன்ற ஒரு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவதாக மன நல மருத்துவர்களால் கருதப்படுகின்றது.

இவர்கள் இயற்கையை விட்டு அதிகம் பிரிந்தே இருக்கிறார்களாம். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் 11 மணி நேரத்திற்கம் மேலாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இவர்களுக்கு உடல் ரீதியான ஆபத்தான பாதிப்புகள் 40சதவீதம் கூடி விடுகின்றது.

இவர்கள் மணிக்கு ஒரு முறை எழுந்து ஐந்து நிமிடமாவது நடந்து பிறகு வேலையைத் தொடருவது நல்லது. 45 வயதினை நெருங்கும் ஆண்களை அதிகம் வெய்யிலில் செல்லும் பொழுது `ஹிக்ஷி' கதிர் கூடுதலாக தாக்குகின்றனவாம்.

இவர்கள் சரும மருத்துவர் ஆலோசனைப்படி `க்ரீம்' பயன்படுத்துவது நல்லது. ஆண்களின் வயது கூடும் பொழுது அசதி, தூக்கம் இவற்றினால் வாகன விபத்துகள் கூடுகின்றது. என்றாலும் படு துடிப்பான இளைஞர்களின் கண் மூடித்தனமான வேகத்தினைக் காட்டிலும் இவர்களே மேல் என ஆய்வுகள் கூறுகின்றன.

சில ஆண்களுக்கு 65 வயதினை கடக்கும் பொழுது தற்கொலை எண்ணம் கூடுகின்றதாம். முதுமையின் வெளிப்பாட்டினை உணர முடியாமல் மன உளைச்சல் பெறும் இவர்கள் மருத்துவ சிகிச்சையின் மூலம் மிக நல்ல முன்னேற்றத்தினை அடைய முடியும்.

புகை பிடிக்கும் ஆண்கள் பக்கவாத பாதிப்பில் இருக்கும் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கின்றது. இவர்கள் எந்த நிமிடம் புகை பிடிப்பதை விடுகின்றார்களோ அந்த நிமிடத்திலிருந்தே இந்த அபாயம் குறையத் தொடங்குகின்றது.
+

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வீட்டிலேயே செய்யலாம் பயிற்சி..!

எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக ஜிம் போகவேண்டிய அவசியமில்லை. தினமும் காலையில் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்து உடலை வார்ம் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு, வீட்டில் ‘புஷ் அப்ஸ்’ என்று சொல்லப்படும் தரையில் படுத்து கைகளை கொண்டு உடலை மேலே உயர்த்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை வீதம் மூன்று செட் செய்ய வேண்டும்.

இதனால், மார்புப் பகுதி கை தசைகள் வலுப்பெறும். அதே சமயம் கடுமையான வலியும் இருக்கும். தினமும் இதைச் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம். அதன் பிறகு, ‘ஆப்ஸ் வொர்க் அவுட்’.

வயிற்று பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க இரு கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்து உடலை முன்னும் பின்னுமாக, படுத்துக் கொண்டே உயர்த்த வேண்டும். இது போன்ற எளிய வழிமுறைகளால் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கிவிடலாம்.
+

தொப்பை குறைய உதவும் ஒர்க்அவுட் - சொல்லப்போறேன் கேளுங்க..!

தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியவை.  ஆனால் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. இந்த பயிற்சி செய்து மிகவும் எளிமையானது. வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை செய்யலாம்.

தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. மேலும் இந்த பயிற்சி கால் முட்டிகளுக்கும், கைகளுக்கு நல்ல வலிமையைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். கால்களை ஒரு அடி அகலமாக வைக்கவும். கைகயை தலையின் பின்புறமாக கொண்டு சென்று இரு கை விரல்களையும் இணைத்து கொள்ளவும்.

இப்போது முன்புறமாக குனிந்து வலது கைமுட்டியால் இடது கால் முட்டியை தொட முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அனைவருக்கும் இவ்வாறு தொட வராது. பயிற்சியை தொடர்ந்து செய்ய செய்ய தொட முடியும். இப்போது இடது கைமுட்டியால் வலது கால் முட்டியை தொட வேண்டும்.

ஆரம்பத்தில் மெதுவாகவும், ஒரு வாரம் பழகிய பின்னர் வேகமாகவும் செய்ய வேண்டும். 15 முறை செய்த பின்னர் 5 விநாடிகள் ஓய்வு எடுத்து பின் மறுபடியும் பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும்.

நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவையும், நேரத்தையும் கூட்டிக் கொள்ளலாம்.  இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

கால் முட்டிவலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனை தரும். முகுது பகுதியில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், முகுது வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
+

சாப்பிட்டவுடன் டாய்லெட் செல்வது நல்லதா..? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

பலருக்கும் உள்ள வினோத பழக்கம் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க செல்வது. இதனால் வெளியூர் செல்லும்போது பலரும் தர்மசங்கடமும், அவஸ்தையும் அடைகின்றனர். ஆயுர்வேதத்தில் இதற்கு கிரகணி நோய் என்று பெயர்.

அதாவது வயிற்றிலிருந்து குடல் பகுதிக்கு செல்லும் வளைவுப் பகுதியான டியோடினத்தில் ஏற்படும் பாதிப்பே கிரகணி நோயாகும். வயிற்று போக்கு ஏற்பட்டு ஜீரணசக்தி சரி ஆவதற்கு முன்பாக தேவைக்கு அதிகமாக, தேவையற்ற உணவுகளை உண்பதால் தோஷங்கள் ஏற்பட்டு வயிற்று பாகமாகிய டியோடினம் பாதிக்கப்படுவதால் இந்நோய் உண்டாகிறது.

இந்த நோய் ஆரம்பத்தில் அதிக தாகம், சோர்வு, பலம் குறைந்தது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், ஜீரணம் தாமதம், உடலில் பாரம் ஏற்றியது போன்ற அறிகுறிகள் இருக்கும். சாப்பிட்ட உடன் மலம் கழித்தல், ரத்தசோகை, வயிற்றில் பெருமல் சத்தம், வயிற்றுப்புண், குடலில் எரிச்சல் உணர்வு, காய்ச்சல் உணர்வு, நாடித்துடிப்பு வேகமாக காணப்படுவது, முதுகுவலி, பல் ஈறுகளில் பழுப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஆயுர்வேதம் இதனை 6 வகையாக பிரிக்கிறது. வாதம், பித்தம், கபம், சன்னிபாகம் (வாதம் பித்தம் கபம் 3ம் கலந்தது), சங்கரக கிரகணி, கதிஅந்தர கிரகணி என 6 வகைப்படும். அக்னி எனப்படும் ஜீரணசக்தியை அதிகப்படுத்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

சித்திரகாதி குளிகை, துத்தவடி, ஜாதிபத்திரி சூரணம், கங்காதர சூரணம், நிர்பதி வல்லப ரசம், பியூசவல்லி ரசம், ரசம் பற்படி, சென்ன பற்படி, பஞ்சாமிர்த பற்படி, சாரியங்கிய கிருதம், சாருங்கியாதடி, கிரகணி கபாரசம் போன்றவை தன்மைக்கேற்ப வழங்கப்படும். ஜீரண சக்தி பிரச்சனை ஏற்படும்போது அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இல்லாவிடில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் வெளியேறுவதால் ரத்தசோகை ஏற்படலாம். பலக்குறைவு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் இதரநோய்கள் தாக்க வாய்ப்புகள் ஏற்படும்.  
+

நின்று கொல்லும் நீரிழிவு கட்டுப்படுத்தும் வழிமுறை இதோ உங்களுக்காக..!

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.

நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி Hyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
3. களைப்புத் தன்மை (Weakness)
4. எடை குறைவு (Weight Loss)
5. பசி அதிகரித்தல் (Increased appetite)
6. நாவறட்சி (Dry mouth)
7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச் சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன.

இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம் பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.

இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.
நமது உடலில் சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.

தேவையான மூலிகைகள்

வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.

உணவு முறைகள்

தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.

சாதாரணமாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம். கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு (Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப்படும்.

2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவுமுறைகள் என்பன அடங்கும்.

3. தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.

4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.

5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக…
+