03/08/2014

நல்ல திடமான மற்றும் ஆரோக்கியமான விந்தணுவை பெற சில எளிய வழிகள்...!

பல லட்ச விந்தணுக்களுக்கு மத்தியில் சண்டையிட்டு முதன்மையாக வந்ததாலே இன்று நாம் இருக்கிறோம். ஆக குழந்தை பெற்றுக் கொள்ள தேவைப்படும் முக்கிய கூறே ஆண்களின் விந்தணுவே. அவை வீரியமிக்கவையாக இருந்தால் தானே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். 'அந்த காலத்து ஆள், அதான் கல்லு மாதிரி இருக்கான்' என்று பலரும் சொல்லி கேட்டிருப்பீர்கள். உண்மை தான், ஆரோக்கியமாக இருந்த காரணத்தினால் தான் அக்காலத்தில் பல குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

ஆனால் இன்றோ நிலைமை மாற்றிக் கொண்டிருக்கிறது. மாசு, சுகாதாரமற்ற சூழ்நிலை, உடல் ஆரோக்கியம் என பல பல காரணத்தினால் நாம் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அதனால் தான் என்னவோ விந்தணுவும் திடமாக பலருக்கு இருப்பதில்லை. இப்போது குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகிறீர்களா? சரி, உங்களுக்கு உங்கள் விந்தணுவின் ஆரோக்கியத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டால், அதனை ஊக்குவிக்கும் வழிகள் அவசியமாகும்.

விந்தணுவை திடமாக மாற்ற நினைப்பவர்களை வால்நட்ஸ் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். வால்நட்ஸ்களில் ஜிங்க் உள்ளதால் அது உங்கள் ஆண்மை இயக்குநீர் (டெஸ்டோஸ்டிரோன்) செயல்முறையை மேம்படுத்த உதவும். இதனால் விந்தணு அசையுந்தன்மையும் சீராகும். ஜிங்க் உள்ள கடல் சிப்பி, வாழைப்பழங்கள் மற்றும் பாதாம்களையும் கூட உண்ணலாம்.
விந்தணு குறைபாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் உதவும். மேலும் டி.என்.ஏ-வை பாதிப்படையாமால் காக்கும். கீரை, வெண்ணெய் போன்ற வளமையான வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொண்டால், கருத்தரித்தலின் வீதத்தை மேம்படுத்தி விந்தணுவின் தரத்தை ஊக்குவிக்கும். ஆரோக்கியமான வைட்டமின் டி உணவுகளை உட்கொண்டால், குறிப்பாக நீந்தும் விந்தணு நன்றாக மேம்படும். எக்காரணத்திற்காகவும் பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்ள கூடாது.

ஜிம்மிற்கு செல்வது தசைகளையும், உடலையும் வளர்ப்பதற்கு மட்டும் கிடையாது. தீவிரமான உடற்பயிற்சிகளின் மூலம் ஆண்மையியக்குநீர் அளவை மேம்படுத்த உதவும். இது உங்கள் விந்தணு தரத்தை அதிகரிக்கும். அதனால் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்காதீர்கள்.

மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற ஒன்று தான் இது. ஆனால் இந்த அறிவுரையை கேட்காமல் நடந்தால் பாதிக்கப்பட போவது நீங்கள் தான். உங்கள் விந்தணு டி.என்.ஏ-வை புகை பாதிக்கும். அதனால் விந்தணு குறைபாடுகள் ஏற்படும். சரி, நீங்கள் புகைப்பிடிக்காமல், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்தால் தீங்கு எதுவும் நேராது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த தவறான கருத்தை உடனே நீங்கள் அழித்து விட வேண்டும். பார் போன்ற இடங்களுக்கு சென்றால் பல திசைகளில் இருந்தும் புகை கிளம்பும். இது உங்களை கட்டாயமாக பாதிக்கும்.

ச்லாமிடியா மற்றும் கானாரியா போன்ற சில தொற்றுக்கள் உங்கள் விந்தணு எண்ணிக்கைகளுடன் நேரடியாக தொடர்பை கொண்டுள்ளது. இவையனைத்தும் உடலுறவு மூலமாக பரவும் நோய்களாகும். இவைகளை தடுக்க ஒரே வழி தான் உள்ளது - அது தான் பாதுகாப்பான உடலுறவு. அதனால் உங்கள் காமத்தை கட்டுப்படுத்தி, உங்களுடன் படுக்க நினைக்கும் அனைவருடனும் உடலுறவு வைத்துக் கொள்ள எண்ணாதீர்கள். மேலும் எப்போதும் ஆணுறை உபயோகப்படுத்த மறக்காதீர்கள்.

இணையதளத்தை பயன்படுத்தவோ அல்லது படம் பார்க்கவோ உங்கள் லேப்டாப் என்னும் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் படுத்துக் கொண்டே அதனை செய்வீர்கள்? அப்படி செய்கையில், மடிக்கணினியின் சூடு நேரடியாக உங்கள் விதைப்பையை அடையும். உங்களுக்கு திடமான விந்தணு வேண்டுமானால், இது கண்டிப்பாக அதை நிறைவேற்ற விடாது. ஏன், சூடான கார் இருக்கையில் அமர்வது கூட ஆபத்தே.

மேற்கூறியவைகளை தவிர, அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை கொண்டிருக்க கூடாது. அதே போல் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது. கருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் அதனை காப்பது அவசியமாகும்.
+

ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் முருங்கைக் கீரை பற்றிய குறிப்பு...!

* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

* முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.

* முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

* இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

* முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

* கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

* ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
+

காலையில சாப்பிட மறக்காதீங்க... அப்புறம் ‘ஹார்ட் அட்டாக்’ வரும் ஜாக்கிரதை..!


எனக்கு காலையில சாப்பிடுற பழக்கமேயில்ல..' எனச் சொல்லிக் கொள்ளவது சமீபத்திய பேஷனாகிவிட்டது. நீங்களும் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இக்கட்டுரையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.

காலை உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து கடந்த 16 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட லண்டன் உணவியல் வல்லுநர்கள், தற்போது இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்கள். காலையில் கட்டாயம் சப்பிட வேண்டும், இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய ஆலோசனை

ஹார்ட் அட்டாக்...

காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் 27% அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

காரணிகள்...

பெரும்பாலும், ஆண்கள் காலை உணவைத் தவிர்க்க, சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, முழு நேரப் பணி, திருமணமாகாமல் இருத்தல், உடல் உழைப்பு குறைவு போன்றவை பெரும்பாலும் காரணிகளாக அமைகின்றனவாம்.

ராத்திரி சீக்கிரமா சாப்பிடுங்க...

அதேபோல், இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 55% அதிகம் என தெரிய வந்துள்ளதாம்

16 வருட ஆய்வு...

ஆராய்ச்சியாளர்கள் இது குறித்தான ஆய்வு கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்விற்கான கேள்விகளைக் கேட்கப் பட்டவர்கள் பெரும்பாலும் 45லிருந்து 82 வயதிற்கு உட்பட்டவர்கள்.

குண்டாயிடுவீங்க...

அதேபோல், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் தவிர்த்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் அதிகமாம். இதன் தொடர்ச்சியாகவே இதய நோய்கள் மூலம் மரணங்கள் கூட நேரிடுகிறதாம்
+

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்..!

சமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை உண்ணும் உணவுகளும், வாழ்க்கை முறையும் தான்.

அதுமட்டுமின்றி, தற்போது ஆண்கள் அதிக வேலைப்பளுவின் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதுவும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடக்க ஆரம்பித்தால், அப்போது கெட்ட பழக்கங்களை விட்டு, அப்போது உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

அதிலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வந்தால், திருமணத்திற்கு பின் குழந்தை பெற முயற்சிக்கும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும், விலை குறைவில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.

ஆம், டார்க் சாக்லெட் சாப்பிட்டால் விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் அதில் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டு வாருங்கள்.

வாழைப்பாத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்னும் நொதி நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

வால்நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் பல்வேறு வகையான புற்றுநோயை தடுப்பதில் இருந்து, விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வரை பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஏனென்றால் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவை விந்தணுவின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் வைத்துக் கொள்ளும்.

பூண்டுகளில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இவை பாலுறுப்புகளுக்கு இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்து வருவது மிகவும் நல்லது.



பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கத்தை குறைப்பதுடன், விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

கடல் சிப்பியில் விந்தணுவின் உற்பத்திக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ ஆசிட்டுகள், ஜிங்க் நிறைந்துள்ளது. ஆகவே ஆண்கள் இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.


அவகேடோவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தால், அவை விந்தணுவின் உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து, வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் ஜிங்க் அதிகம் நிறைந்துள்து. எனவே ஆண்கள் இதனை மாட்டிறைச்சியை அவ்வப்போது சேர்த்து வந்தால், விந்தணுவின் அளவு அதிகரிப்பதுடன், பாலுணர்ச்சியும் சற்று தூண்டப்படும்.
மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்தத்தில் உள்ள கெமிக்கலை குறைக்கும். இந்த கெமிக்கலானது விந்தணுவை அழிக்கும் திறன் கொண்டது. எனவே மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விந்தணு அழிவதைத் தடுக்கலாம்.
+

காளான் சாப்பிட்டு பல்லாண்டு காலம் வாழலாம்..! - இதைக்கொஞ்சம் படிச்சா...!

காளான் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. காளான்களை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும். காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்து குறைவான அளவிலும் உள்ளன.

 புரதச்சத்து காய்கறிகள் மற்றும் பழங்களை விட காளான்களில் அதிகமாக உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகைக்கு சிறந்த மருந்து. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களை போக்கும். இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். அசைவ உணவுக்குப் பதிலாக காளான் உணவை உட்கொண்டால் நோயின்றி பல்லாண்டு காலம் வாழலாம்.
+

மனஅழுத்தம் போக்க “இஞ்சி டீ” குடிங்க...! - தெரிந்துகொள்வோம்...

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங் க ள் கவலை காணாமல் போய்வி டு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக் கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர் கள்.

கவலை நிவாரணி
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீரணசக்தி கிடைக்கும்
மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.

எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போ தும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக் தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற் படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற் றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற் றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அ ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்து வ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள் ளனர்.
+

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள் - இதோ உங்களுக்காக...!

மஞ்சள்:-
இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும்.

புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.


குங்குமப்பூ:- 
குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி:-
இஞ்சி இல்லாத சமையலே இல்லை. இஞ்சியை வெறும் சுவை, மணத்துக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே, முந்தைய நாள் செய்த கத்தரிக்காய் குழம்பு முதல் சாம்பார் வரை கெட்டுப்போகாமல் இருப்பதற்குக் காரணமே, இஞ்சி சேர்ப்பதுதான். இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது. இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள். 7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.
+

தேவையற்ற கொழுப்பு குறைய... இதயப் படபடப்பு குறைய...! - இதப்படிங்க...!

சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்:-


மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.

டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.

குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.

இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).

மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.

தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.

நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.

ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.

இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.

தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.

எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.

உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.
+