10/08/2014

எளிய முறையில் சில சட்னி வகைகள்..!


1. தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன். தமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்றி நினைத்ததுமே ஞாபகம் வருவது சட்டினியும் சாம்பாரும்தானே? முதலில் தேங்காய்ச் சட்டினியைப் பார்ப்போம்:

 தேவைப்படும் பொருள்கள்: முற்றலான தேங்காய் - ஒன்று பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (அல்லது தேவைக்கேற்ப) உப்பு - 1 தேக்கரண்டி ( பெருப்க்காயப் பொடி / கரைசல் - 1 தேக்கரண்டி கடுகு - 1 / 4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள் எண்ணெய் - தாளிக்கச் சிறிதளவு முதலில் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவல், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மசிக்கவும். மின் அம்மியியில் முதலில் பச்சடி மிளகாயைப் போட்டு அதன் மேல் தேங்காய்த் துருவலைப் போடுவது நல்லது. இல்லாவிட்டால், மிளகாய் மசியாது. சிலர் புளிச்சுவைக்காக ஒரு கோலியளவு புளி சேர்த்து அரைப்பார்கள்.

புளி ஆகாதவர்கள் - அல்லது வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சட்டினியை அரைத்து முடித்த பிறகு அதில் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொள்ளலாம். அல்லது தயிரும் சேர்க்கலாம். சில பச்சை மிளகாய்கள் அதிகமாய்க் காரும். அப்போது சட்டினியில் தயிரைச் சேர்ப்பது காரம் குறைய உதவும். கடைசியாகக் கறிவேப்பிலைகளைக் கிள்ளிப் போடவும். தேங்காய்ச் சட்டினியை அதிக நேரம் பாதுகாக்க முடியாது. ·ப்ரிட்ஜில் கூட ரொம்ப நேரத்துக்குச் சுவை குன்றாமல் இருக்காது. எனவே 3, 4 மணி நேரத்துக்குள் செலவழிப்பது நல்லது.

2. தனித் தேங்காய்ச் சட்டினி - காய்ந்த மிளகாயுடன் பச்சை மிளகாய் போட்டுச் செய்யும் தேங்காய்ச் சட்டினியைப் பொன்ற அதே செய்முறைதான். ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், மிளகாய் வற்றலை முதலில் சிறிது எண்ணெய்யில் வறுத்துக்கொண்டு பின்னர் தேங்கயுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

3.உடைத்தகடலை (பொட்டுக்கடலை) -தேங்காய்ச் சட்டினி தேவைப்படும் பொருள்கள்: நன்கு முற்றிய தேங்காயின் துருவல் - 1 கிண்ணம் உடைத்த கடலை - 1 கிண்ணம் பச்சை மிளகாய் அல்லது வற்றல் மிளகாய்- 10 (அல்லது தேவைப்படி) கடுகு - முக்கால் தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 4 ஆர்க்குகள் பெருங்காயப்பொடி அல்லது கரைசல் - ஒன்றரை அல்லது 2 தே. க. தாளிக் எண்ணெய் - சிறிதளவு உடைத்த கடலையைச் சிறிது எண்ணெய்யில் சற்றே வறுத்துக்கொள்ளவும். அப்போதுதான் அதன் பச்சை வாசனை போகும். (அதைத் தண்ணீரில் களைந்து நீரை வடித்துவிட்டு வறுப்பது இன்னும் நல்லது. ஏனெனில், உடைத்த கடலையில் - அது நாள்பட்டதாயின், ஒரு மக்கல் வாசனை வரும். களைந்தால் அது போய் விடும்.)

முன்னம் கூறிய சட்டினிகளைப் போன்றே இதையும் அரைக்கவும்.

4. கடலைப்பருப்பு-தேங்காய்ச் சட்டினி தேவைப்படும் பொருள்களும் முன்ன்ம் சொன்ன அதே அளவுகளின் படியே. ஆனால், கடலைப் பருப்பு, உடைத்த கடலையைக் காட்டிலும் திடமானதால் மேலும் ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களையோ அல்லது மிளகாய் வற்றல்களையோ அத்துடன் சேர்த்து அரைக்க வேண்டும். புளி அல்லது அலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பதெல்லாமும் கூட முன் சொன்ன சட்டினிகளைப் போலவே தான். எனினும் கடலைப் பருப்பு-தேங்காய்ச் சட்டினி பிற சட்டினிகளைக் காட்டிலும் சற்றே அதிக நேரத்துக்குக் கெடாமல் இருக்கும்.

5. மாங்காய்ச் சட்டினி தேவைப்படுபவை: தோல் சீவப்பட்ட மாங்காயின் துருவல் - ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம் மிளகாய் வற்றல் - 8 அல்ல்து 10 பெருங்காயப் பொடி - 1 தே. க. உப்பு - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மின் அம்மியில் மசித்துக் கடுகு மட்டும் தாளிக்கவும்.
+

எந்தெந்த பொருட்களை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் - தெரியுமா...?

பழங்கள்:
  • திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
  • ஆப்பிள்கள் ஒரு மாதம்
  • சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
  • அன்னாசி (முழுசாக) 1 வாரம்

  • (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்
காய்கறிகள்:
  • புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
  • முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,
  • ஓம இலை 1-2 வாரங்கள்
  • வெள்ளரிக்காய் ஒரு வாரம்
  • தக்காளி 1-2 நாட்கள்
  • காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
  • காளான் 1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:

  • வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
  • சமைத்த மீன் 3-4 நாட்கள்
  • பிரஷ் மீன் 1-2 நாட்கள்
  • ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
  • பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
  • உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்
  • பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
  • சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்
பால் பொருட்கள்:
  • பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
  • பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
  • மோர் 2 வாரங்கள்
  • தயிர் 7-10 நாட்கள்
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை 
  • குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் 
  • மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். 
இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.
+

சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்...!

பண்டையச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
+

எடை குறைப்பு சம்பந்தமாக ஒழிக்கப்பட வேண்டிய 15 கற்பனைகள்..!

அதிக உடற்பயிற்சியும் குறைவாக உணவு உட்கொள்ளும் பழக்கமும் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! எனினும் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒருவர், எளிமையான ஆனால் தவறான பழக்கங்களை மேற்கொள்வதில் பொழுதை கழிப்பாரேயானால், அவர் அதே நிலையிலேயே தொடர நேரிடும்.

கட்டுக்கோப்பான உடல்தகுதியை பெற விரும்பும் ஆர்வலர்களான நாம், எடை குறைப்பின் கற்பனைக்கும், எடை குறைப்பின் உண்மைக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டினை புரிந்து கொள்ள வேண்டும்.உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் 14 சிறந்த வழிகள்!

ஸ்கெட்ச் க்ளினிக்ஸின் எடை குறைப்பு மேலாண்மை குறித்த ஆலோசகர் ரிட்டேஷ் ஜேனி, எடை குறைப்பு சம்பந்தமான நடை முறையில் நாம் கொண்டிருக்கும் 15 கற்பனைகளை தகர்த்து கருத்து தெரிவிக்கிறார்.

கற்பனை: 1

உணவினை தவிர்ப்பது, எடை குறைப்பிற்கு சிறப்பான டயட் முறையாகும்

உண்மை:-உணவினை தவிர்ப்பது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போக்கை மெதுவாக்குகிறது. உணவினை தவிர்க்கும் போது அது வளர்ச்சிதை மாற்றத்தின் தேவையை மெதுவாக்குவதன் மூலம் சேமிக்கப்பட்ட கலோரிகளை பாதுகாத்து உடலிலேயே தக்க வைக்கிறது. ஒரு வேளைக்கான உணவினை தவிர்த்து விட்டு, அடுத்த வேளை உணவினை எடுத்து கொள்ளும் போது, அதிக அளவிலான உணவினை உட்கொள்ள வாய்ப்பு அதிகம். ஒரு நாளில் சீரான இடைவெளியில் மூன்று முறை உணவருந்த வேண்டும். எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் உணவினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக உணவருந்துதல் சிறந்தது.

கற்பனை: 2

உடற்பயிற்சி தேவை இல்லை. உணவு கட்டுப்பாடு மட்டும் போதுமானது.

உண்மை:-எடையை குறைக்க விரும்பும் ஒருவர் உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியையும் சேர்ப்பது அவசியமாகிறது. நமது பசியையோ அல்லது நமக்கு விருப்பமான அனைத்து உணவினையும் உண்ணும் ஆவலையோ நம்மால் தடை செய்ய முடியாது. ஆனால் உணவினை உண்பதால் கிடைக்கும் கலோரிகளை உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க நம்மால் முடியும். நமது தினசரி பழக்கங்களில் உடற்பயிற்சியை சேர்த்து கொள்வதன் மூலம், முயற்சி செய்து அடையக்கூடிய எடை குறைப்பினை நம்மால் பெற முடியும். இதய துடிப்பினை அதிகமாக்கும் வேகமான நடைபயிற்சியை தினமும் 30 நிமிடங்கள் மேற்கொள்வதன் மூலம் வியக்கத்தக்க அளவு எடையினை நம்மால் குறைக்க முடியும். உடற்பயிற்சியை முறையாக தொடர்ந்து மேற்கொள்ளும் போது ,நல்வாழ்வுக்கான சிறந்த உணர்வுகளையும் இதயம் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவற்றை நாம் கூடுதல் பலன்களாக பெறலாம்.

கற்பனை: 3

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீமை செய்வன.

உண்மை:-உடல் என்கிற இயந்திரத்திற்கு முதன்மையான எரிபொருள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். கொழுப்பை போலவே, கார்போஹைட்ரேட்டுகளும் ஒவ்வொரு கிராமிலும் பாதி அளவு கலோரிகளை கொண்டுள்ளன. மக்களின் இன்றைய உணவு பழக்கத்தில் உள்ள சிக்கல் யாதெனில் அவர்கள் தங்கள் உணவினில், எளிமையான கார்போஹைட்ரேட்டுகளான சர்க்கரை மற்றும் உயர்ந்த ஃபுருக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் ஆகியவற்றை எடுத்து கொள்கின்றனர். குறைந்த கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவினை எடுத்து கொள்ளும் போது, அவை மிக உயர்ந்த கலோரி கார்போஹைட்ரேட்களை அவை குறைக்கின்றன மற்றும் எடை குறைப்பிற்கும் வழி வகுக்கின்றன.

இந்த மாதிரியான எடை குறைப்பு நீடித்து நிலைப்பதில்லை. எனினும் குறைந்த கொழுப்பு மற்றும் பல பகுதிகளை கொண்ட சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவு பொருட்களான முழு தானியங்கள் மற்றும் ஸ்டார்ச் உணவு பொருட்கள் உடலுக்கு நன்மை செய்வன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கற்பனை: 4

குறைவான கொழுப்பு மற்றும் கொழுப்புகளற்ற உணவுகளில் குறைவான கலோரிகள் காணப்படுகின்றன.

உண்மை:-குறைவான கொழுப்பு அல்லது கொழுப்புகளற்ற உணவுப்பொருள் குறைந்த அளவு கலோரிகளை கொண்டோ அல்லது கலோரிகளே அல்லாத உணவு பொருளாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குறைவான கொழுப்பினை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிற பல உணவு பொருட்களிலுள்ள, கார்போஹைட்ரேட்கள் மற்றும் சர்க்கரை ஆகியன, கொழுப்புகள் நிறைந்த உணவு பொருட்களிலுள்ள, கலோரிகளையோ அல்லது அதற்கும் அதிகமான கலோரிகளையோ தரலாம். உதாரணமாக ஆப்பிளில் குறைவான கொழுப்பே உள்ளது. எனினும் அது குறைந்த அளவு கலோரிகளை கொண்டிருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே சாப்பிடும் முன் உணவிலுள்ள கலோரிகளை சோதித்து அறிந்து பின் சாப்பிட வேண்டும்.

கற்பனை: 5

உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் பயிற்சி செய்தல் அவசியம்.

உண்மை:-வெறும் 30 நிமிட நடைபயிற்சியே கலோரிகளை எரிக்க போதுமானது. தினமும் 30 நிமிடங்கள் பொழுதுபோக்குடன் கூடிய உலாவினை தினமும் 5 முறை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். உடற்பயிற்சி வேடிக்கையுடன் கூடிய வகையில் அமைந்தால், அதில் ஆனந்தமாக ஈடுபடலாம். நாளடைவில் நேரத்தை அதிகப்படுத்தி, விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கற்பனை: 6

இரவில் தாமதமாக உணவருந்துதலோ அல்லது படுக்கைக்கு செல்லும் சற்று முன் உணவருந்துதலோ, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உண்மை:-கலோரிகள் என்பவை எப்பொழுதும் கலோரிகளே! உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதிகமான உணவினை மேற்கொள்ளும் போது எடை அதிகரிப்பு உண்டாகிறது. தாமதமாக உணவினை உட்கொண்ட பின் படுக்கைக்கு செல்வது என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல! நாம் அதிகமாக உணவினை உண்ணும் போது நாம் உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை கொழுப்புகளாக சேமித்து வைக்கும் அற்புத ஆற்றல் படைத்தது. உடலுக்கு தேவைப்படும் கலோரிகளை விட அதிகமான கலோரிகளை உணவாக எடுத்து கொள்ள நேரிடுகிறது என்பதால் தான் பெரும்பாலான மக்கள் இரவில் தாமதமாக உணவருந்தக் கூடாது என்கின்றனர்.

கற்பனை: 7

குறைவான வளர்ச்சிதை மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கிறது.

உண்மை:-எடை அதிகரிப்பதால் உடலில் கொழுப்பு மட்டுமே அதிகரிப்பதில்லை அந்த கொழுப்பிற்கு உறுதுணையாக தசையும் உடலில் அதிகமாகிறது. உடல் எடையில் தோராயமாக 20% முதல் 30 % வரை வரை தசை ஆகும். தசை திசுக்கள் கலோரிகளை எரிக்கின்றன. எனவே அதிக எடையை கொண்டவரின் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே அதிக உடல் தசையை கொண்டவர் சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்தை கொண்டவர் ஆவார். உடலின் இயக்க செயல்பாடுகளால் எரிக்கப்படும் கலோரிகளை இது உள்ளடக்கியது அல்ல.

கற்பனை: 8

ஃபேட் டயட் நிரந்தர எடை இயல்பிற்கு சிறப்பான துணை புரிகிறது.

உண்மை:-ஃபேட் டயட்கள் (சௌத் பீச் டயட், ப்ளட் க்ரூப் டயட், அட்கின்ஸ் டயட், கிளிசெமிக் டயட் போன்றவை). எடையை குறைக்கவும் மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் சிறந்தது அல்ல. இந்த டயட்களினால் நாம் உடல் எடையை சிறிது இழக்கலாம். எனினும் இந்த வகையான டயட் அட்டவணைகள் கொண்டிருக்கும் குறைவான கலோரிகள் கொண்ட உணவினை தொடர்ந்து பின்பற்றுவது கடினமானதாகும். ஆரம்பத்தில் ஆர்வத்துடன் பின்பற்றும் மக்கள் நாளடைவில் களைப்படைந்து, மீண்டும் தங்கள் பழைய உடல் எடையை பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளுக்கு குறைவான கலோரிகளை கொண்ட உணவினை உட்கொள்ளும் போது, அது இதய துடிப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். இது அபாயகரமானதாகும்.

ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மிதமான பகுதி உணவாக உண்டு, உடல் இயக்க செயல்பாடுகளை தினசரி வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்துவதன் மூலம் உடல் எடையை வாரத்திற்கு ½-2 கிலோ வரை குறைக்க முயற்சி செய்வதே உடல் எடையை குறைத்து, மேலும் அதை அதிகரிக்காமல் தொடரும் சிறந்த வழி என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் போது, டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

கற்பனை: 9

அதிக புரதம் கொண்ட உணவு வகைகளை உண்பது, உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும்.

உண்மை:-தினமும், அதிக புரதங்கள் கொண்ட இறைச்சி, முட்டை, சீஸ் போன்ற உணவு வகைகளிலிருந்து தேவையான கலோரிகளை பெறுவது என்பது சமச்சீரான உணவு திட்டம் அல்ல. அதிகமான கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொள்ளும் போது, இதய நோய் ஏற்படலாம். மலச்சிக்கலை ஏற்படுத்தும் குறைந்த அளவு நார்ச்சத்தினை கொண்ட சில காய்கறிகளையும், பழங்களையும் நாம் அதிகமாக உண்ணலாம். இதனால் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைபாடு ஏற்படலாம். இதே போல உயர்ந்த அளவு புரதம் கொண்ட டயட் அட்டவணையை நாம் பின்பற்றும் போது, களைப்பு, பலவீனம், குமட்டல் ஆகிய குறைபாடுகள் தோன்றலாம்.

கற்பனை: 10

எடை அதிகரிப்பு மரபு சம்பந்தப்பட்டது, பெற்றோர் வழியாக அது குழந்தைகளை அடைகிறது.

உண்மை:-கொழுப்பு ஜீன் என்று எந்த ஒரு ஜீனும் கிடையாது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை மேற்கொள்ளும் பருமனான பெற்றோரிடமிருந்து. அவர்களின் குழந்தைகளும் அவற்றை கற்கின்றனர். இதனால் ஆரோக்கியமற்ற கேடு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் குடும்பம் என்கின்ற மரத்தில் கடத்தப்படுகின்றன.

கற்பனை: 11

உடல் எடையயை குறைக்க விரும்புபவர் ஏரோபிக் என்று அழைக்கப்படும் கார்டியோ உடற்பயிற்சியை அதிக அளவு மேற்கொண்டாக வேண்டும்.

உண்மை:-எடையை இழக்க முயற்சி செய்யும் போது நாம் உடலுக்கு ஏதேனும் அதிர்ச்சியை தர வேண்டும். அதாவது ஏதேனும் உடற்பயிற்சியை நம் உடல் மேற்கொள்ள வேண்டும். எந்த உடற்பயிற்சியும் செய்திருக்காத நிலையில் தினமும் ஓடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் பயிற்சி நிச்சயம் நம் உடலை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தும். இதன் காரணமாக ஆரம்பத்தில் நாம் எடையையும் இழக்கலாம். எனினும் இழந்த எடையை எத்தனை நாளைக்கு தக்க வைக்க முடியும் என்பது கேள்வி குறியாகிறது. நாளடைவில் நாம் எடை குறைப்பின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதன் பின்னர் தொடர்ச்சியான ஒரே மாதிரியான உடற்பயிற்சியின் காரணமாக மீண்டும் நமது பழைய எடையயை நாம் அடைய தொடங்குவோம். இவ்வாறு செய்வதற்கு பதிலாக யோகா, எடை தூக்கும் பயிற்சி மற்றும் கார்டியோ ஆகிய பல வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நமது எடை அதிகரிப்பதை கொண்டு, உடற்பயிற்சி செய்யும் முறையை சரி செய்யலாம். அதாவது நீடித்த எடை மேலாண்மையின் பொருட்டு செய்யும் உடற்பயிற்சியில் தேவைப்படும் மாறுதல்களை செய்வது அவசியமாகிறது.

கற்பனை: 12

வறுக்கப்படாத ஆனால் வேக வைத்த சிற்றுண்டிகளை எவ்வளவு வேண்டுமானாலும் விருப்பம் போல உண்ணலாம்.

உண்மை:-பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்பட்டு, சந்தையில் அவை அளவிற்கு அதிகமாகவே கிடைக்கின்றன. மக்களும் தங்கள் அறியாமையில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி, வறுக்கப்பட்ட உணவு வகைகளை தாங்கள் உண்ணவில்லை என்ற மகிழ்ச்சியில் இந்த வகையான பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுகின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த முறை சரியானதே!

ஆனால் அது எந்த மாதிரியான பேகிங் செய்யப்பட்ட உணவு வகையை நாம் உண்கிறோம் என்பதை பொறுத்தது. உதாரணமாக எண்ணெயில் பொறித்த சிக்கனுக்கு பதில் பேக்கிங் செய்யப்பட்ட சிக்கனை நாம் உண்ணலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகப்படியான எண்ணெயை நம்மால் தவிர்க்க முடிகிறது.

இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். ஆனால் மாறாக நாம் பேக்கிங் செய்யப்பட்ட சக்ரீஸ் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட பக்கர்வாடிஸ் ஆகியவற்றை உண்ணும் போது அவை கொண்டிருக்கும் உயர்ந்த அளவிலான சோடியம் மற்றும் மைதா ஆகியவற்றின் காரணமாகவும், மிக அதிகமாக பதப்படுத்தப்படுவதன் காரணமாகவும் அவை ஆரோக்கியமான உணவுகள் என்று சொல்வதற்கில்லை. நாம் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கையில் இது போன்ற உணவு வகைகளை எடுத்து கொள்வோமேயானால், இவை நமது உடல் எடையை அதிகப்படுத்தவே செய்யும்.

கற்பனை: 13

எடையை இழக்க விரும்பும் போது, கூடுதல் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை:-எடையை குறைக்க ஊட்டச்சத்து துணை பொருட்களை எடுத்து கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. முதலாவதாக எடை இழப்பு துணை பொருட்கள். நமது குடலின் இயக்க அதிர்வுகளை அதிகப்படுத்துகின்றன. இதனால் நம் உடலின் இயல்பான குடல் இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலில் வறட்சி மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றுகின்றன. இரண்டாவதாக இன்னும் பிற ஊட்டச்சத்து துணை பொருட்கள் மலத்தை வெளியேற்றுவதன் மூலம், நாம் உண்ணும் டயட் உணவிலுள்ள அனைத்து கொழுப்புகளையும் அழிக்கின்றன. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து கொழுப்பு அமிலங்களையும் நாம் இழக்க நேரிடுவதால், இது பரிந்துரைக்கபடுவதில்லை.

கற்பனை: 14

வாழைப்பழங்கள் எடை குறைப்பில் பங்கு கொள்ள முடியாது.

உண்மை:-ஆரோக்கியமான உணவு அட்டவணையில் வாழைப்பழங்களும் இடம் பெறுகின்றன. மேலும் இது எடை குறைப்பில் நாம் ஈடுபட்டிருக்கும் போது கொழுப்பினை குறைக்கவும் செய்கின்றன. எனினும் எந்த ஒரு உணவு பொருளும் தானாகவே ஒருவருக்கு எடையை இழக்க துணை புரிவது இல்லை. எடையை இழக்கக் விரும்பும் ஒருவர் பற்றாக்குறையான கலோரியை கொண்டவராக இருக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட அதிகமாக பெறப்பட்ட கலோரிகளை எரிக்க வேண்டும். 10% முதல் 15% வரையிலான கலோரி பற்றாக்குறை சிறந்த முறையில் எடை குறைப்பில் செயலாற்றுகிறது. சிறந்த கலோரி பற்றாக்குறையை கொண்டவர், கொழுப்பை இழப்பதை விட தேவைக்கு அதிகமாக உள்ள தசையை இழக்கிறார்.

கற்பனை: 15

போதை உணவு நீக்கப்பட்ட உணவு திட்டமே எடை குறைபிற்கு சிறந்தது.

உண்மை:-தொடர்ச்சியாக பல வாரங்கள் இரவில் பணி புரிந்து ஜங்க் ஃபுட், கூடுதலான செயற்கை உணவுகள் என்று சொல்லப்படுகிற உணவு வகைகளை உட்கொள்ளும் போது ஏற்படுகிற களைப்பினால் மனதளவில் நீங்கள் எடையை இழந்து விட்டது போல உணர்வீர்கள். திட்டமிடப்பட்ட சமசீரான போதை நீக்க உணவு திட்டம் உங்களில் தந்திரம் புரிந்திருக்கிறது. இங்கே சமசீரான போதை நீக்க உணவு திட்டம் என்பது வெறும் பழரசமோ அல்லது சிறந்த தூய்மை மற்றும் நீர் போன்ற நம்மை பலவீனமாக்கும் போதை நீக்கும் உணவுகளல்ல. சமசீரான உணவு திட்டம் என்பது பதப்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அடங்கிய உணவு வகைகளை தவிர்ப்பதாகும்
+

எளிய 100 மருத்துவக் குறிப்புகள் - உங்களுக்காக மட்டுமே...!

1) பொன்மேனி தரும் குப்பைமேனி

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு

பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி

நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை

சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு

கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு

காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி

மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8)குழந்தையை காப்பான் கரிப்பான்

கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?

புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி

மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி

நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
+

ஆயுர் வேதத்தில் வயாக்ரா பற்றி இதோ சில தகவல்கள் உங்களுக்காக...!


இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள்.

 இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு.

அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது.

இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.

மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.

அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.

கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.

நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.
+