21/08/2014

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா..?

* வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு சீயக்காய் போட்டு நன்றாக தேய்த்து குளிக்கவும்.

* தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனுடம் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின் கூந்தலை கழுவவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் சம அளவில் எடுத்து தடவி மசாஜ் செய்து கொள்ளவும். அடுத்த நாள் எப்பொழுதும் போல் தலைக்கு குளிக்க வேண்டும். (கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவேண்டும். பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)

* தினமும் தலையை நன்றாக வாரி பின்னிக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போது மட்டும் தலையை உங்கள் விருப்பம் போல் வாரி கொள்ளலாம். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் தினமும் எண்ணெய் வைத்து பின்னல் போட்டு கொள்ள வேண்டும். இந்த முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
+

வசிகர அழகு தரும் முல்தானி மெட்டி..!

முல்தானி மெட்டி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது மற்றும் சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. மேலும் தோலின் முகப்பரு மற்றும் கறைகள் நீக்க உதவுகிறது.

முல்தானி மெட்டி உண்மையிலேயே தோல் பராமரிப்பு பொருளாக உள்ளது. முல்தானி மெட்டி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய, முல்தானி மெட்டி தரக்கூடிய அழகு குறிப்புகளை பார்க்கலாம்....

* முல்தானி மெட்டி நன்றாக எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதை அனைத்து விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கோடை காலத்தில் ஏற்படும் சரும கருமையை நீங்க பெரிதும் உதவுகிறது..

* எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து பேஸ் பேக் போட்டால் மென்மையான எண்ணெய் இல்லாத முகத்தை பெறலாம்.

* உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம். மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* கோடை காலத்தில் சில ஒவ்வாமை (அலர்ஜி), சருமம் சிவத்தல் மற்றும் தடித்தல் இருந்தால் முல்தானி மெட்டி ஒரு நல்ல நிவாரணியாகவும் பயன்படுகிறது.

* சிலருக்கு முகத்தில் பருவால் ஏற்றபட்ட தழும்புகள் மற்றும் அம்மை நோயால் வந்த தழும்புகள் இருக்கும். அவர்கள் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் அரைத்த கேரட் விழுது மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2 அல்லது 3 நாட்கள் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதை காணலாம்.

* முல்தானி மெட்டியுடன் அரைத்த பாதாம் விழுது மற்றும் கிளிசரின் சேர்த்து முகத்தில் போட்டால் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

* 1 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 முட்டையின் வெள்ளை கரு, 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து வசிகரிக்கும் நிறம் கிடைக்கும்.
+

உடல் பருமனுடன் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்..!

பொதுவாக அதிகப்படியான உடல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒருவேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

ஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில் உடல் எடையை சரியாக வைத்துக் கொண்டு பின் முயல வேண்டும். மேலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், ஓவுலேசன் தடைபடுவதோடு, ஐவிஎஃப் சிகிச்சையினால் கூட குழந்தையை பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே கருத்தரிக்கும் முன்பே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர மருத்துவருடன் கலந்தாலோசித்து, அவர் சொல்லியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பிற்றி, உடல் எடையை குறைத்து கருத்தரித்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

ஆனால் உடல் பருமனுடன் கருத்தரித்துவிட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இக்காலத்தில் மருத்துவரை தவறாமல் சந்தித்து, அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயலக்கூடாது. இதனால் குழந்தைக்கும், தாய்க்கும் தான் ஆபத்து. இங்கு உடல் பருமன் உள்ளவர்கள் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பகால நீரிழிவிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதிலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், கர்ப்பகால நீரிழிவானது எளிதில் வந்துவிடும்.

உடல் பருமனுடன் கருத்தரித்த பெண்களுக்கு சிறுநீரக பாதையில் அதிகம் நோய்த்தொற்றுகள் ஏற்படும். இப்படி சிறுநீரக பாதையில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், சிசேரியன் முறையில் தான் பிரசவம் நடைபெறும்.

அதிகப்படியான உடல் எடை இருந்தால், அத்தகையவர்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு குறையும். ஏனெனில் உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை கருப்பையின் வாயை அடைத்துவிடும். எனவே அத்தகையவர்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் பெரும்பாலும் நடைபெறும்.

சில நேரங்களில் சிசேரியன் செய்வது கூட பிரச்சனையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சிசேரியன் செய்த பின்னர், தாய்க்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எப்படியெனில் சிசேரியன் செய்யும் போது அதிகப்படியான கொழுப்பை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த பின்னர், அந்த வெட்டுக்காயம் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். மேலும் இப்படி நாட்கள் அதிகமாவதால், அவ்விடத்தில் தொற்றுகள் அதிகம் ஏற்படும்.

பொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு நிம்மதியான தூக்கமே கிடைக்காது. அவர்கள் தூங்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதனால் குறட்டை விடுவார்கள். இப்படி குறட்டை விடுவதால், அவர்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதில் இரத்த நாளங்களில் இரத்த உறைவு, பிரசவ நாட்களில் பிரச்சனை மற்றும் சிலர் கருத்தரிக்கும் தன்மையையே இழக்க நேரிடும்.

+