11/08/2014

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கு:- உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்:-பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்:-உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்:-மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்
+

சைவ உணவுகளால் கூந்தல் உதிர்தல் தடுக்கப்படும் தெரியுமா உங்களுக்கு..?

நிறைய மக்கள் சைவ உணவுகளால் கூந்தல் வலுவிழக்கிறது என்று நினைக்கின்றன. உண்மையில் சைவ உணவுகளால் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் எப்படியோ அந்த சைவ உணவுகளால் இதயம் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடல் எடை குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் ஒரு சில சைவ உணவுகளாலும் கூந்தல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
சைவ உணவுகள் சிலவற்றால் கூந்தல் நன்கு வலுவடைவந்து, கூந்தல் உதிர்தல் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் மாசடைந்து சுற்றுசூழல் காரணமாக கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏன், அந்த பிரச்சனைகளால் வலுக்கைத் தலை கூட வருகிறது. சொல்லப்போனால் கூந்தலை வைத்தே உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லலாம். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சனையுமின்றி இருக்கும். இல்லையெனில் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறட்சி போன்றவை ஏற்படும்.

இவையெல்லாம் வருவதற்கு காரணம், உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும். ஆனால் தற்போது அத்தகைய சத்துக்கள் அனைத்தும், சைவ உணவுகளில் உள்ளன. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களான ஜிங்க், வைட்டமின் சி, புரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலே, கூந்தலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அந்த சத்துக்கள் எந்த உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளன என்பதைப் பார்ப்போமா

சோயா பீன்ஸ்:-கூந்தல் பொதுவாக கெராட்டீன் என்னும் புரோட்டீனால் தான் உருவானது. அதனால் தான் கூந்தல் உதிர்ந்தால் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏனெனில் அவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பழுதடைந்த முடியை சரிசெய்கிறது.

பாதாம்:-பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இவை கூந்தலை விரைவில் வளரச் செய்கிறது. மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் உள்ளது. இதனால் கூந்தலின் வேர்கள் நன்கு வலுவடையும் மற்றும் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக வைக்கிறது.

ப்ரௌன் அரிசி:-இந்த வகையான அரிசியில் காப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ள இந்த அரிசியை அதிகம் உணவில் சேர்த்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்:-பச்சை காய்கறிகளான பசலைக் கீரை, கடுகு கீரை போன்றவற்றில் கூந்தலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள், இரும்புச்சத்துக்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்:-சிட்ரஸ் பழங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் அதில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஏனெனில் வைட்டமின் சி கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. கொலாஜென் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பொருள்.

சீஸ்:-வலுவிழந்து இருக்கும் முடியை சரிசெய்வதற்குத் தேவையான புரோட்டீன் சீஸில் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.

ஓட்ஸ்:-ஓட்ஸில் இருக்கும் இரும்பு சத்தை உடலானது எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். மேலும் இதில் எளிதில் கிடைக்காத பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.

கொண்டைக்கடலை:-பருப்பு வகைகளில் ஒன்றான கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது ஸ்கால்ப்பில் பொடுகு ஏற்படாமல் தடுப்பதில் சிறந்தது. அதிலும் இதில் உள்ள கனிமச்சத்துக்கள் பொடுகு வராமல் பாதுகாப்பதில் சிறந்தது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.
+

கொத்து, பிரைட்ரைஸ் சாப்பிடுகிறவர்களா நீங்கள்..? - எச்சரிக்கை..!

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம், கொழும்பில் வாழும் 20 தொடக்கம் 50 வயதுக்குட்டபட்ட 200 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது கொழும்பில் வசிப்பவர்களை விட தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரே கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்கின்றனர்.

ஆய்வு செய்யப்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு கொலஸ்ட்ரோல் மற்றும் ஈரல்பாதிப்பு போன்ற நோய்கள் இதனால் ஏற்பட்டுள்ளன.
இதற்குக் காரணம் இவ் உணவுகளுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படும் கொழுப்பு நிறைந்த பாம் ஒயில் ஆகும்.
மேலும் இவ் உணவுகள் கடைகளில் திறந்வெளியில் வைத்து இரவு நேரங்களில் தயாரிக்கப்படுகின்றன இவ்விடங்கள் எப்போதும் சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படும்.

மேலும் இவ்வாறான இடங்களில் அதிகமான கரப்பான், பல்லி போன்ற பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. சிலவேளைகளில் உணவுகள் வைத்திருக்கும் பைகளுக்குள் சென்று இவை இருக்க வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதால் இவைகளையும் சேர்த்து கொத்து, பிரைட்ரைஸ் உணவுகளுடன் சமைத்து வழங்குகின்றனர்.

இதனை அறியாமல் வாங்கி உண்ணுபவர்களுக்கு நோய்கள் ஏற்படுவது மாத்திரம் அல்லாது ஆயுட்காலம் குறையும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக இவ்வாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
+

நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ் - தயார் செய்வது எப்படி..!

நீரிழிவு உள்ளவர்கள், உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்று சொல்வார்கள்.

 அதிலும் அந்த பாகற்காயை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் போன்று செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

இங்கு நீரிழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2

எலுமிச்சை சாறு - 2

டீஸ்பூன் தேன் - 1

டீஸ்பூன் மிளகு தூள் - 1

சிட்டிகை உப்பு - தேவையான அளவு

ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.

இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!

+

இந்த எல்லா மூலிகை சாறிலும் முழுமையான ஆரோக்கியம் இருக்குதுங்க...!

நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி

இளநீர் - இளமை

வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்

வெண் பூசணி - அல்சர்

வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்

வில்வம் - வேர்வையை வெளியேற்றும்

கொத்தமல்லி - ஜீரண சக்தி

புதினா - விக்கல், அஜீரணம்

நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு

துளசி - தொண்டை சளி, சோர்வு

முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்

தூதுவளை - தும்மல், இருமல்

கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்

கடுக்காய் - புண்களை ஆற்றும்

அகத்தி இலை - உடல் உஷ்ணம்

ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்

+

இதெல்லாம் நீங்க சாப்பிட்டீங்கனா டாப்பா இருப்பீங்க...- சும்மா படிச்சி பாருங்க...!

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
+

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா..? இதோ சில டிப்ஸ்...!

மரபு ரீதியாக அல்லது உயர்தரமான ஆரோக்கியத்தால் சில பேருக்கு இயற்கையாகவே பளபளப்பான சருமம் இருக்கும். அப்படி இல்லாதவர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாதவர்களே. தெளிவான, ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் என்பது பார்ப்பதற்கு அழகையும் ஸ்டைலையும் அதிகரிக்கும். உங்கள் சருமம் உடனடியாக பளபளப்புடன் இருக்க வேண்டுமானால், அதனை சில வழிமுறைகளால் நீங்கள் அடைந்திடலாம்.


அழகை அதிகரிக்க மணிக்கணக்காக உங்கள் நேரத்தை செலவு செய்யத் தேவையில்லை. அழகை உடனடியாக மெருகேற்ற கீழ்கூறியவைகளை பின்பற்றினால், கண்கள் வீக்கம், எண்ணெய் பசையுள்ள கூந்தல் மற்றும் கதிர்வீச்சு சருமம் போன்ற பொதுவான பிரச்சனைகளை சரி செய்யலாம்.

உங்கள் தோற்றம் அழகாக இருப்பதற்காக நீங்கள் எடுக்கும் சிறந்த முயற்சிகளில் ஒன்று தான், முகத்திற்கு ஒளி ஊட்டுதல். அதற்கு, சிறிதளவு மாய்ஸ்சரைஸரை வைத்து உங்கள் கண்களை ஈரப்பதமாக்குங்கள். இதனால் கண்களை சுற்றியுள்ள பகுதி வறண்டு காணப்படாது. அதன் பின் மஞ்சள் நிறத்தொனியை கொண்ட, லேசான பிரதிபலிப்பை உண்டாக்கும் கன்சீலரை பயன்படுத்துங்கள். இது கண்களுக்கு கீழ் இருக்கு ஊதா குறிகளை மறைத்து விடும். கன்சீலர் தடவிய பிறகு, எப்போதும் செய்யக்கூடிய ஒப்பனையை தொடங்கலாம்.

உங்கள் கூந்தல் வறண்டு, அசிங்கமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்கள் அழகை மெருகேற்ற ஒரு கூந்தலை நல்ல முறையில் கண்டிஷன் செய்தால் போதும்; பார்ப்பதற்கு மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். கூந்தலுக்கு ஷாம்பூ போட்டு அலசிய பிறகு, கண்டிஷனரை பயன்படுத்தினால், கூந்தல் மின்னப்போவது உறுதி.

உங்கள் அழகை உடனடியாக மெருகேற்ற, கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, மற்றொரு டிப்ஸாக விளங்குகிறது. உங்கள் உள்ளங்கை மென்மையாக, நல்ல நறுமணத்தோடு இருந்தால், உங்கள் மனநிலையை அது ஊக்குவிக்கும். பொதுவாக மற்றவர்களின் கவனம் நம் மேல் முதலில் விழும் பகுதிகளில், நம் கைகளும் ஒன்றாகும். அதனால் அதனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது முக்கியமாகும்.

லிப் பாம் அல்லது லிப் க்ரீமை தடவிக் கொண்டால், உங்கள் உதடுகளுக்கு கூடுதல் கவர்ச்சியை அது உண்டாக்கும். லிப் பாம் பயன்படுத்துவதற்கு முன்னாள், கன்சீலரை பயன்படுத்தி அந்த பகுதியை மென்மையாக மாற்றிக்கொள்ளுங்கள்.

மேக் அப் செய்வது உங்கள் முகத்தை பளிச்சென செய்து அழகாக காட்டுவதை போல, சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் முகத்தில் பொலிவை உண்டாக்கும்.

ஆச்சரியமாக உள்ளதா? ஆம், டார்க் சாக்லெட்கள், உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு அதிசயங்களை உண்டாக்கும். மேலும் நீங்கள் மன ரீதியாக சோர்வுடன் இருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவை அளித்து, உங்களை மன ரீதியாகவும் அமைதிப்படுத்தும்.
+

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன..?


காலை 6 மணி :

டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி :

2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி :

மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி :

 எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி :

 காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி :

ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி :

காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம்.

படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்.
+