25/09/2014

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா..?

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்..?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது , நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது. உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
+

கரண்டி ஆம்லெட் - எப்படிச் செய்வது..?


விருதுநகரின் மற்றுமொரு சிறப்பு கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.

என்னென்ன தேவை..?

முட்டை-1

சின்ன வெங்காயம் - கைப்பிடி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது..?

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இதுபோன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.
+

24/09/2014

பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு இதுதான் - தெரியுமா உங்களுக்கு..?


கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பஸிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன. 
+

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ உங்களுக்காக..!

மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் .

ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது.

எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

சத்துக்கள் :-

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :-

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்வித நோய் தாக்கமும் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

மலச்சிக்கலைப் போக்கும் :-

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

பற்கள் வலுவடையும் :-

கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அதன் அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

செரிமான மண்டலம் பலமடையும் :-

கொய்யாப்பழமானது செரிமான மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், போன்றவை வலுப்பெறும். மேலும் இது மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.

இரத்த சோகை :-

இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

போதையை மறக்கடிக்கும் :-

மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். இதனால் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

புற்றுநோயை தடுக்கும் :-

கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.
இரத்த அழுத்தம் :-

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இத்தகைய பொட்டாசியம் கொய்யாப்பழத்தில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு :-

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இருமல் மற்றும் தொண்டைப்புண் :-

மழைக்காலத்தில் பலருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். அத்தகையவர்கள் கொய்யா மரத்தின் இளம் கிளைகளை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரினால் வாயை கொப்பளித்தால், அவை விரைவில் குணமாகும்.

ஆரோக்கியமான கண்கள் :-

கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முதுமையைத் தடுக்கும் :-

கொய்யாப்பழத்தின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. இப்படி தோல் நீக்காமல் சாப்பிட்டால், அவை முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். அதுமட்டுமின்றி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராகவும் மாற்றும்.

ஈறுகளில் வீக்கம் :-

ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வாயை கொப்பளித்தால், வலி மற்றும் வீக்கம் குறையும்.

* குறிப்பு *

* கொய்யாப்பழத்தில் இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது வயிற்று வலியை உண்டாக்கும்.

* கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழம் போதுமானது.

* வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
+

14/09/2014

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..!

எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.

அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) உலக முதல் உதவி தினமாகும்.

இதை முன்னிட்டு நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...

ஆஸ்த்துமா:-

கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல்.

சிகிச்சை:-

சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.

மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

மின்சாரம் தாக்குதல்:-

சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.

சிகிச்சை:-

சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

நீரில் மூழ்குதல்:-

சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும்.

இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும்.

மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

எலும்பு முறிவு:-

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும்.

சிகிச்சை :-

அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.

கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும்.

சுளுக்கும் - சதை பிடிப்பும்:-

வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.

சிகிச்சை:-

ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும்.

பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.

மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு):-

கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.

சிகிச்சை:-

கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.

கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம்.

பக்கவாதம்:-

மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும்.

சிகிச்சை:-

இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும்.

இதயக் கோளாறுகள்

மார்பு வலி:- மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும்.

மேல் மூச்சு வாங்கும். சிகிச்சை:-உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும்.

அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.

இதயத்தில் திடீரென்று கோளாறு:-

அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும்.

தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும்.

சிகிச்சை:-

மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும்.

பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும்.

நாய்கடி:-

வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.

சிகிச்சை:-

கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.

நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.

நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:-

வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

சிகிச்சை:-

உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.

நீரிழிவு வியாதி :-

சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.

சிகிச்சை:-

மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.

சர்க்கரை குறைந்து விட்டால்:-

வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.

சிகிச்சை:-

உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம். 
+

காரமான மிளகாய் வகைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்...!

அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பல்கிப் பெருகியுள்ள மிளகாய் வகையின் ஆதாரமாக இருப்பது தான் மிளகுகளாகும். பார்த்தாலே காரம் தூக்கும் இந்த வண்ணமயமான தாவரத்திலிருந்து பலரும் விலகியிருந்தாலும், அதன் மிளகுத் தூளை - அதுவும் சூடாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பது உண்மை!

நார்ச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள தாதுப்பொருட்களை கொண்டிருக்கும் மிளகு, எடை குறைப்புக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய சைவ உணவாகும். கோஸ்ட் பெப்பர்களைப் போல, மிளகை சூடாக வறுத்து சாப்பிட்டால், அது எடை குறைப்பு முயற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும். ஏனெனில், உடலின் செயலூக்கத்தை மேம்படுத்தவும் மற்றும் குறைவான உணவை சாப்பிட்டு, கொழுப்பை எரிக்கவும் இது உதவும்.

மிளகு ஒரு மென்மையான மற்றும் பருவ கால சைவ உணவாகும். மிளகுச் செடியை வளர்ப்பதற்கு அதிகமான வெப்பநிலை தேவைப்படும் மற்றும் அது மெதுவாகவே வளரும். இவற்றை உணவுக்காகவும், வாசனைப் பொருளாகவும் மற்றும் அலங்காரத்திற்காகவும் கூட வளர்க்கிறார்கள்.

இப்போது மிளகாய் வகைகளின் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய கருவியாக இருப்பது மூலப்பொருள் P என்பதாகும். இதுதான் உடலில் எரிச்சலையும் மற்றும் வலியையும் ட்ரைஜெமினல் நரம்பிற்கு கொடுத்து, உடலை உணரச் செய்து வருகிறது. ட்ரைஜெமினல் நரம்பை (Trigeminal Nerve) அடிப்படையாக கொண்டு தான் நமது உடல், உடற்கூடு மற்றும் சுவாச துவாரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இயக்கமும் உள்ளது. ஒருமுறை நரம்பின் நார்களுக்குள் இந்த மூலப்பொருள் P புகுந்து கொண்டால், தலைவலி மற்றும் சைனஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற மூலப்பொருள் கூட்டுத் தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலி ஆகியவற்றிற்கு நிவாரணமாக இருக்கும் என்று மருத்துவ பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்களின் இரத்தம் மற்றும் மூட்டுகளை இணைக்கும் சினோவியல் திரவம் ஆகியவற்றில் மூலப்பொருள் P-யின் அளவு அதிகரித்து விடுகிறது. கேப்சைசின் கலந்துள்ள கிரீமை சாப்பிடுவதன் மூலமான இந்த மூலப்பொருள் P உற்பத்தியாவதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

திறமையான பாக்டீரியா எதிர்ப்பு குணத்தையும் மற்றும் நீண்ட காலத்திற்கு சைனஸ் (Sinusitis) வருவதை தவிர்க்கும் குணத்தையும் கேப்சைசின் பெற்றுள்ளது. இது ஒரு சுத்தமான மற்றும் இயற்கையான வேதிப்பொருளாக இருப்பதால், நாசித் துவாரங்களின் அடைப்புகளை சுத்தம் செய்யவும் மற்றும் சைனஸ் தொடர்பான அலர்ஜிகளையும் சமாளிக்க உதவும். கேப்சைசினை (Capsaicin) தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பை நீண்ட நாட்களுக்கு தவிர்த்திட முடியும்

மிளகில் உள்ள கேப்சாய்சின் எரிச்சலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் குணத்தைக் கொண்டுள்ளது. மேலும், காரமான மிளகில் வைட்டமின் சி-யும் நிரம்பியுள்ளது. எனவே, காரமான மிளகை வலியுள்ள மூட்டுகளிலும், திறந்திருக்கும் காயங்களிலும் மற்றும் இரத்த இழப்பைத் நிறுத்துவதற்கும் நேரடியாகப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பணியை மிளகு செய்வதால், எரிச்சல் மற்றும் வேதனையை குறைத்திட முடியும். பல் வலி இருந்தால், கயென்னே மிளகை எடுத்து எண்ணெயில் போட்டு வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பருத்தி துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். பெப்டிக் அல்சர், டிஸ்பெப்ஸிய மற்றும் நியோரோபதிகளில் பல்வேறு நபர்களும் காரமான மிளகை பயன்படுத்துகிறார்கள். சிலி மிளகை வைத்து தயாரிக்கப்படக் கூடிய பிளாஸ்டர்கள் மற்றும் மாவு கட்டுகள் உள்ளன. உங்களுக்கு சாதாரண ஜலதோஷமோ, மூச்சுக்குழாய் அழற்சியோ வந்திருந்தால், சிறிதளவு மிளகை எடுத்து சிக்கன் சூப்பில் போட்டு சாப்பிடுங்கள்.

டியூக் பல்கலைக்கழகத்தில் அண்மையில் வாய்வு பிரச்சனைகள் பற்றி செய்யப்பட்ட ஒரு ஆய்வில், கேப்சைசினுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான குடல்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எரிச்சலூட்டும் குடல் நோய் (Inflammatory Bowel Disease) உண்டாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நரம்பு செல் தேவையாக இருப்பதை டியூக் பல்கலைக்கழக குழுவினர் கண்டறிந்துள்ளனர். எரிச்சலின் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும் வலிகள், அசௌகரியங்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றின் ஒட்டுமொத்த பெயராக எரிச்சலூட்டும் குடல் நோய் உள்ளது.

புற்றுநோய்க்கான செல்களை தானாக அழிந்து விடுமாறு தூண்டும் குணம் கேப்சைசினுக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் சுமார் 80 சதவீதத்தையும், புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகளையும் கேப்சைசின் கொண்டு குணப்படுத்த முடியும். 5 இல் 1 பகுதியினர் இந்த நோய்க்கு நிவாரணம் பெறமாலேயே இறந்து விடுகின்றனர். மேலும், புரோஸ்டேட் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் பொருட்டாக, கேப்சைசின் மாத்திரைகளை பயன்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர்.

ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்தவும் மற்றும் டையாபடிக் நியூரோபதிக்கு நிவாரணம் தரவும் மிதவெப்ப மண்டலத்தைச் சேர்ந்த ஒரு மிளகு வகை உதவுகிறது. மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய நியூரோபெப்டைட் என்ற மூலப்பொருள் P-யை தடுக்கக் கூடியதாக அறியப்படுகிறது கேப்சைசின். நரம்புகள் புடைத்துக் கொள்ளவும் கூட இந்த மூலப்பொருள் P காரணமாக இருப்பதால், அதன் காரணமாக தலைவலியும், சைனஸ் அறிகுறிகளும் வரலாம். கூட்டு தலைவலிகள், ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலிகளை கேப்சைசின் மிகச்சரியாக குறைத்து விடுவதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

எரிச்சலுடன் தொடர்புடைய குடல் நோய்க்கு கேப்சைசின் நிவாரணமளிப்பதை டியூக் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. ஹெச்.பைலோரி போன்ற பாக்டீரியாக்களையும் கேப்சைசின் அழித்து விடுவதால், வயிற்று புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

காரமான மிளகுகள் உடலின் இயக்கத்தை எளிதில் தூண்டி விடுவதால், கொழுப்புகளை எரிக்கும் தெர்மோஜெனசிஸ் ஏற்படுகிறது என்று 'தி ஜர்னல் ஆஃப் பையலஜிகல் கெமிஸ்ட்ரி' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற வேதிப்பொருள் நமது உடலுக்குள் இருக்கும் கலோரிகளை எரித்திட உதவுகிறது. சிறிதளவு முட்டையுடன் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிட்டால் நமது உடலின் இயக்கத்தை சுவையுடன் தூண்டிட முடியும்.

கொழுப்புகளின் அளவு, ட்ரைகிளிசரைட்கள் மற்றும் பிளாட்டலெட் அக்ரகேஷன் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்முடைய இதயத்தைப் பாதுகாக்கும் பணியை கேப்சைசின் செய்கிறது. இரத்தம் உறைவதற்கு அவசியமாக தேவைப்படும் நார்களை நம்முடைய உடல் பிரிப்பதற்கும் கேப்சைசின் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களில், மிளகை தங்களுடைய உணவில் சாதாரணமாக பயன்படுத்தி வருபவர்கள் யாருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவில்லை என்பது உண்மை. இவ்வாறு மிளகை பயன்படுத்தாக கலாச்சாரங்கள் உள்ள இடங்களில் இதய நோய் சகஜமாக இருப்பதும் உண்மை!

தோட்டங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படும் பூச்சி விரட்டியாகவும் காரமான மிளகுகள் பயன்படுகின்றன. இதன் முக்கியமான மூலப்பொருளாக கேப்சைசின் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரத்துடனும் மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறையினரும் கேப்சைசின்னை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த அனுமதிக்கின்றனர். 1962-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேப்சைசின் பொருள், நாய்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு விடுப்பதாக இருந்தது.

புறஊதாக்கதிர்களின் மோசமான தாக்குதல்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் பணியை இனிப்பு மிளகுகள் செய்கின்றன. புறஊதாக்கதிர்கள் தோலின் தளத்தை பாதித்து, எரிச்சலைத் தூண்டுகின்றன. மேலும், மூப்படைவதையும், தோல் புற்றுநோய் வருவதையும் தூண்டுகின்றன.

இனிப்பு மற்றும் காரமான மிளகுகள் ஆகிய இரண்டிலுமே வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, கோலைன் மற்றும் போலியோட் ஆகியவை நிரம்பியுள்ளன. இவற்றில் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால், நார்ச்சத்துக்களை அள்ளித் தரும் ஆதாரங்களாக இவை உள்ளன.

ப்ரீ-ராடிக்கல்களை எதிர்க்கக் கூடிய மற்றும் இதயம், புற்றுநோய் மற்றும் நியூரோ டிஜெனரேட்டிவ் நோய்களுக்கான வாய்ப்பை குறைக்கக் கூடிய பைட்டோ கெமிக்கல்களை இனிப்பு மற்றும் காரமான மிளகுகள் கொண்டுள்ளன.

காரமான உணவினால் வாய்வு தொல்லை ஏற்படும் என்ற எண்ணத்திற்கு தடை போடுங்கள்; சில வகையான வாய்வு பிரச்சனைகளுக்கு தகுந்த நிவாரணமாக காரமான மிளகுகள் உள்ளன. கேப்சைசின் அஜீரணத்தை ஏற்படுத்தும் ஹெ.பைலோரியை அழித்து விடுகிறது. இது போன்ற நேரங்களில், பாதிக்கப்பட்ட வயிற்றை பாதுகாக்கும் வகையில் சாறுகளை உற்பத்தி செய்யவும் கார மிளகு தூண்டும்.
+

எலுமிச்சையின் அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள்..! - இதோ உங்களுக்காக..

பெரும்பாலான இந்திய உணவுகளில் எலுமிச்சையானது உணவின் சுவையை அதிகரிக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் எலுமிச்சையை ஜூஸ் செய்து அருந்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி எலுமிச்சை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஏனெனில் எலுமிச்சையில் ஃப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. மேலும் எலுமிச்சையானது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியதும் கூட.

இப்போது எலுமிச்சையில் நிறைந்துள்ள அந்த அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போமா!!!

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

எலுமிச்சையானது உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனை குடித்து வந்தாலோ அல்லது எலுமிச்சை துண்டை அவ்வப்போது வெறும் வாயில் தின்று வந்தாலோ, உடலின் வெப்பநிலையானது குறையும்.

இரத்த நாளங்கள் நன்கு வலிமையாக இருப்பதற்கு வைட்டமின் பி (Vitamin P) என்னும் பயோ ஃப்ளேவோனாய்டு மிகவும் அவசியம். இத்தகையது எலுமிச்சையில் அதிகம் இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வந்தால், உடலின் உள்ளே ஏற்படும் இரத்தக் கசிவைத் தடுக்கலாம்.

காலரா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து விரைவில் குணமாக எலுமிச்சை ஜூஸ் பெரிதும் உதவியாக உள்ளது. ஏனெனில் எலுமிச்சையானது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள வைரஸ்களை அழித்து வெளியேற்றுகிறது.

வாத நோய் மற்றும் நாள்பட்ட மூட்டு வலியால் அவஸ்தைப்படுவர்களுக்கு, எலுமிச்சை நல்ல நிவாரணத்தைத் தரும். ஏனென்றால் எலுமிச்சை ஜூஸை குடிப்பதால், அவை நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடலை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலுமிச்சையில் பொட்டாசியம் இருப்பதால், அவை உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

எலுமிச்சைக்கு நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடும் குணம் உள்ளது. இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அமிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, தொண்டையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளானது நீங்கும்.

எலுமிச்சையின் மற்றொரு சிறப்பான நன்மை தான் பல் வலியைப் போக்குவது. தினமும் எலுமிச்சையைக் கொண்டு ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், அவை ஈறுகளில் வரும் இரத்தக்கசிவைத் தடுக்கும். மேலும் இது வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடித்தால், அவை காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றில் இருந்து சிறந்த நிவாரணம் அளிக்கும்.

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த நன்மை தான், வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் எலுமிச்சையை மிஞ்ச வேறு எதுவும் இல்லை.

எலுமிச்சையின் தோலில் மூளையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பைட்டோ நியூட்ரியண்ட் உள்ளது.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், பித்த கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே நீங்கள் மேற்கூறிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டிருந்தால், எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள்.

எலுமிச்சை குடலியக்கத்தை அதிகரிப்பதுடன், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தாலும், எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் எலுமிச்சையில் ஆரோக்கியமான கண்களுக்கு தேவையான வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது.

உங்களுக்கு தெரியுமா, எலுமிச்சையில் 22 புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது. இதனால் எலுமிச்சையை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால், அவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

+

12/09/2014

ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க சில தகவல்கள் - இதோ உங்களுக்காக..!

ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

உண்ணுவதில் எளிமை: வாழ்வதற்காகவே உண்ண வேண்டும் என்ற தொடர் மொழியை இங்கே வலியுறுத்த விரும்புகிறோம். எளிமையான உணவுகள், குறைந்த எண்ணெயில் சமைத்த நற்பதமான உணவுகள் போன்றவைகளை உண்ண மக்களை அறிவுறுத்த வேண்டும். எந்த ஒரு டையட்டிலும் உண்ணக்கூடிய உணவின் அளவை தான் முதலில் மாற்ற வேண்டி வரும். டையட்டை மேற்கொள்பவர்கள் மனரீதியான கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியமற்ற உணவை கண்டிப்பாக அவர்களால் கைவிட முடியும். அதனால் கஞ்சி, வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப்கள் மற்றும் கோதுமையால் செய்த உணவுகளை உண்ண வேண்டும்.

நொறுக்குத் தீனிகள்: வறுத்த, எண்ணெய் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேரளாவின் பாரம்பரிய அவித்த வாழைப்பழத்தை உங்கள் நொறுக்கு தீனிகளில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பளங்களை பொறித்து எடுக்காமல் லேசாக வறுத்தாலே போதுமானது.

அதிக நார்ச்சத்துள்ள தானியங்கள்: வரகு சாதம் அல்லது அவித்த காய்கறிகளுடனான அதிக நார்ச்சத்துள்ள பார்லியை உண்ணலாம். இவைகளை அதிகமாக உட்கொண்டாலும் கூட தெவிட்டாது. இவைகளை உங்களின் மதிய உணவில் அல்லது இரவு உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஓட்ஸ் மற்றும் உடைத்த கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். சந்தையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக உண்ணாதீர்கள்.

இனிப்புகள் மற்றும் டெசர்ட்கள்: டீயில் சேர்க்கப்படும் சர்க்கரையை தவிர வேறு இனிப்புகளுக்கு இடம் கிடையாது. ஆனாலும் சர்க்கரையை இழந்த உணர்வை நீங்கள் பெற மாட்டீர்கள். எனவே கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், அவை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நிலையாக வைத்து இனிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்தும்.

புரதம் நிறைந்த உணவுகள்: சோயா, பலவித பருப்புகள், கொண்டைக்கடலை, கொள்ளு மற்றும் பச்சை பயிறு போன்ற உணவுகளில் இருந்து புரதச்சத்தை பெற்றிடுங்கள். அசைவ உணவு வகைகளுக்கு ஆயுர்வேதம் தடை போடுவதில்லை. ஆனால் ஹார்மோனால் உருவாக்கப்படும் மாமிச இனங்கள் என்றால் கண்டிப்பாக கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் குழம்பில் வைத்த மீனே தவிர பொரித்த மீன் அல்ல.

பானங்கள்: அடர்த்தியான தயிருக்கு பதிலாக மோரை பருகுங்கள். டீ மற்றும் காபி கூட பருகலாம். தினமும் 1500 மி.லி. அளவிலாவது இளஞ்சூடான தண்ணீரை பருகினால், உங்களை நீர்ச்சத்துடன் வைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, பசி வருவதையும் தாமதப்படுத்தும். வெதுவெதுப்பான நீர் நீண்ட நேரம் வயிற்றில் இருப்பதால் பசி உண்டாவதை தாமதப்படுத்தும்.

உங்கள் விருப்ப உணவுகளை தவிர்த்தல்:நீங்கள் சாதம் சாப்பிடுபவராக இருந்தால், மதிய உணவின் போது கோதுமை தோசை அல்லது சப்பாத்திக்கு மாறுங்கள். அதனால் உண்ணும் அளவு குறையும். இதனை மாற்றி பின்பற்றினாலும் கூட அதுவும் உதவி புரியும்.

கலோரிகளை எண்ணுதல்: கலோரிகளை எண்ணுவது மட்டும் முக்கியம் அல்ல. உண்ணும் உணவிலும் வாழ்க்கையிலும் நெறிமுறையை கடைப்பிடிப்பது அவசியம். உண்ணுவதில் மாறிய உணவு பழக்கங்களும், அணுகுமுறையும், உடல் எடையை குறைக்கவும், பராமரிக்கவும் பெரிதும் உதவும்.

முக்கியமானவை: சூரிய உதயத்திற்கு முன் காலையில் வேகமாக எழுந்திருப்பது, பகலில் தூங்காமல் இருப்பது அல்லது இரவு நீண்ட நேரம் தொலைகாட்சி பார்க்காமல் இருப்பது போன்ற இதர வாழ்க்கை முறை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கொள்கைகளை ஒரு மாத காலம் கடைப்பிடித்தால், உடல் நல எடை குறைப்பிற்கு அது ஒரு பாதை வகிக்கும். மேலும் எளிய உணவுகள் மற்றும் உடல ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவைகளே ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியங்கள்.
+

10/09/2014

கருப்பை நோய்களை தடுக்கும் மெட்டி

மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுபடுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி அவசியப்படுகிறது.

கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைகிறது.
+

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..? காதைக் கிட்ட கொண்டு வாங்க...!

பெண்களுக்கான மச்ச பலன்கள்..!

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்

நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை & பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்

வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை


ஆண்களுக்கான மச்ச பலன்கள்...!

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.

இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்களை பார்ப்போமா…

1. புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்

02. நெற்றியின் வலது புறம் & தனயோகம்

03. வலது புருவம் & மனைவியால் யோகம்

04. வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்

05. வலது கண் & நண்பர்களால் உயர்வு

06. வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்

07. இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி

08. மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை

09. மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்

10. மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

11. மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை

12. மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்

13. மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை,
கலைத்துறையில் நாட்டம்

14. வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்

15. இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு

16. வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்

17. இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்

18. காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்

19. தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்

20. கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

21. இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால்
விரும்பப்படுவார்

22. வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்

23. வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

24. அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார,
ஆடம்பர வாழ்க்கை

25. புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

+

அதிக நேரம் கணனி பார்ப்பவருக்கு ஏற்படும் கண் பிரச்சினையை போக்க சில டிப்ஸ்...!


கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில்,

இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.

அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம்.

 அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு… இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 – 20 – 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.

வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.

‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு.

ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.

பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும்.  பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு,

 வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்தவயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காம, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம்.’’
+

கொழுப்பை குறைத்து உடம்பை “சிக்” கென்று வைத்திருக்க உதவும் உணவுகள்...!

கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது.

எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

* கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

* இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

* வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

* லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

* சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

* நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

* சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

* கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

* கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

* சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சோயாபால் தினமும் அருந்தவும்.

இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்து சாப்பிடுங்கள். தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
+

மூளைச் சோர்வைத் தடுக்க - இதோ இயற்கை உணவுகள்..!

அன்றாடம் வீட்டுச் சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு: பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்புக் காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை:-அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்தத் திராட்சைப் பழத்தைத் தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்குச் சுறுசுறுப்பு: நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்களும் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள்.

திப்பிலியை வல்லாரைச் சாறில் ஊற வைத்துக் காய வைத்துப் பொடிச் செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை: பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய் :மாணவர்கள் நெல்லிக்காய்த் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வைத் தெளிவாகும்.

நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”
+

மூட்டு வலிக்கான காரணங்களும், சித்த மருத்துவ சிகிச்சையும் - உங்களுக்காக...!

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையே சித்த மருத்துவ சிகிச்சை. பண்டைய சித்தர்கள் உருவாக்கிய இந்த அருமருந்து தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அவதிப்படுவது மூட்டு வலியால் தான்.

மூட்டு வலி வந்தால் குணப்படுத்துவது கடினம் என்பதே பலரும் கூறும் கருத்து. அந்த மூட்டு வலிக்கு அற்புத மருந்து சித்த மருத்துவத்தில் இருப்பதாக கூறுகிறார் டாக்டர் குணசிங் வேதநாயகம். சித்தர்கள் இதற்காக அக, புற மருந்துகள் ஏராளம் சொல்லி வைத்துள்ளார்கள்.

நடக்க முடியாமல் கடும் வலியால் துன்பபடுவோருக்கும், அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் இருப்போருக்கும், எலும்பு மூட்டுகள் விலகி இடம்பெயர்ந்து விகாரமாக தோன்றுவோருக்கும் சித்த மருத்துவத்தில் சக்தி வாய்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்படும் கசாயம், நெய், ரசாயனம், லேகியம், பற்பம், செந்தூரம், தைலம், பூச்சு, ஒற்றடம் போன்ற பக்க விளைவற்ற மருந்துகளாலும், தொக்கணம் போன்ற பயிற்சிகளாலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சித்த மருத்துவப்படி 84 வகை வாதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மூட்டு வலிகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

குழந்தைகளை பாதிக்கும் மூட்டு வலி:-

ஜுரம், அடிபடுதல், காசநோய், அம்மை நோய் போன்ற நோய்கள் வந்த குழந்தைகளுக்கு இந்த மூட்டு வியாதி வரலாம். 16 வயதுக்கு குறைந்தவர்களை இவ்வியாதி தாக்குகிறது. ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகள் பாதிப்படையலாம்.

ஆரம்ப அறிகுறியாக குழந்தைகள் இரவு நேரத்தில் மூட்டு வலி ஏற்பட்டு கத்துவார்கள். நடக்க சிரமப்படுவார்கள். இந்த வியாதியை சரியான முறையில் கண்டறிந்து குணப்படுத்தா விட்டால் மூட்டுகள் அழிந்து அதன் வலுவையும், செயலையும் இழக்க கூடும். எனவே நோயை சரியான முறையில் நிர்ணயம் செய்து மருத்துவம் புரிய வேண்டும்.

ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்:-

இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும்.

முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட வரலாம்.

மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.

மூட்டுகளின் அமைப்பு மாறி வாத்து கழுத்து போல் ஆகும். கட்டை விரல் `இசட்' வடிவில் ஆகும். இது ஒரு கொடிய வியாதி. இதற்கு முறையான மருந்துகள் நீண்டநாள் எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும்.

பெரியவர்களை பாதிக்கும் மூட்டு வலி:-

பெரியவர்களை பாதிக்கின்ற மூட்டு வலியை தேய்வு வாதம் என்றும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கிறோம். பொதுவாக 55 முதல் 70 வயதுள்ளவர்களை பாதிக்க கூடிய இந்நோய் தற்போது 35 வயதுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.

இந்த வாதம் அடிபட்டதினால், எலும்பு முறிவினால், ஹார்மோன் கோளாறுகளினால், அதிக நடையால், அதிக எடையால் வரக்கூடும். சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள்.

மூட்டுப்பகுதி வெளிப்புறமாக வளைந்து நடக்க முடியாமல் வலியால் துடிப்பது நோயின் முற்றிய நிலை ஆகும். பரிசோதனைகளால் நோய் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த ஓய்வுடன் கூடிய மருந்துகள் கொடுத்து இந்த வியாதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இளவயதினர் பூரணமாக சுகம் பெறுவர்.

சோரியாட்டிக் ஆர்த் ரைடிஸ்:-

காளாஞ்சக படை என்ற தோலில் உண்டாகும் செதில் உதிர்வு நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை பெறாமல், பராமரிக்காமல் இருந்தால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டு அசைக்க முடியாமலும், எலும்பு தோற்றத்தில் நெளிந்தும் குறுகியும், விகாரமாக தோன்றும். நகக்கண் நிறம் மாறியும், சதை துருத்தியும் காணப்படும்.

சோரியாஸ் வந்தவர்கள் அதற்கு முறையான சிகிச்சை செய்யாத போது இந்த கொடிய வியாதியின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் நல்ல சுகம் பெற முடியும்.

முடக்குவாதம்:-

மூட்டு எலும்புகளின் உள்ளேயும், வெளியேயும் யூரிக் அமிலத்தின் படிமங்கள் படிவதின் காரணமாக முடக்குவாதம் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இந்த வியாதி இரவு நேரங்களில் கால் பெருவிரல் வீக்கம் உண்டாகி சிவந்த பளப்பள தோற்றத்துடன் கடுமையான வலிகளுடன் ஏற்படுகிறது.

நாளடைவில் பிற மூட்டுக்களையும் பற்றி மூட்டுகள் செயல் இழந்த நிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த வியாதி பியூரன்களால் இப்படி ஆகிறது. மனித உடலில் சராசரியாக 70 சதவீதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

இந்த அளவு குறைகின்றபோது இவ்வியாதி வர வாய்ப்பாகிறது. இவ்வியாதி பெண்களை விட ஆண் களுக்கே அதிகமாக காணப்படுகிறது. எனவே மூத்திர நாளங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், யூரிக் அமிலம் உடலில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எளிய வழிமுறைகள்:

மூட்டு வலிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்:-

1. இயற்கை உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.

2. அதிக புளி, காரம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

3. அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

4. மதுபானம், மாது, மாமிசத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது.

5. வாழைக்காய், உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வாயுவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6. குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரையும், குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.

7. தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

8. நோயின் தன்மை அதிகமாய் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும். 
+

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.
+

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்...!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது! 
+

பரசிட்டமோல் பற்றித் தெரியுமா? சிறப்பு தகவல்கள்..!

(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.

உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல. ,இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் எடைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் எடையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?ஒரு கிலோ உடல் எடைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mgஅதாவது உங்கள் உடல் எடை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் எடையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.உங்கள் எடை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )உங்கள் எடை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் எடையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் எடை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் எடையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த எடையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.

இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.அதேபோல் உங்கள் குழந்தையின் எடை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( எடையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).

இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.
+

08/09/2014

புகைப்பிடிப்பதை கைவிடுவதனால் என்ன நடக்கும் என்று தெரியுமா..?

"நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது. அதனை சரிவர பாதுகாக்க வேண்டும்..." என்ன இதை அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கா? நம்ம குட்கா முகேஷ் தான் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் முன்னதாக இதை நமக்கு சொல்கிறார் அல்லவா? இதை நாம் கிண்டல் செய்தாலும் கூட. இது தான் நிதர்சனமான உண்மை.

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதற்கு அடிமையாக்கிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பழக்கம் பல பேருடைய டென்ஷன் மற்றும் அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இந்த பழக்கத்தை கைவிட நினைத்த பல பேர், இதற்கு மாற்று பொருளாக நிக்கோட்டின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். வெகு சிலராலேயே இந்த பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த முடிகிறது. சரி, இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

2 நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.

தூங்கும் முறையில் கூட மாற்றங்களை காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

முடிவில், இதையெல்லாம் தாண்டி இந்த பழக்கத்தை கைவிட்டால், அது உங்கள் உயிரை காக்க போவது உறுதி. இந்த பழக்கத்தை கைவிட்டால், அந்த மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும். ஆனால் அதனால் கிடைக்க போகும் பயன்களை எண்ணும் போது இவை எல்லாம் துட்சமே.
+

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் …!

(குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்).

* அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

* வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்!

* உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.

* மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்கே்ஷக்.

* எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக்.

* ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ்.

* ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.

* மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.

* இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்கே்ஷக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.

* இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!
+

07/09/2014

மாரடைப்பை தடுக்கும் உணவுகள் இதோ உங்களுக்காக..!

அன்றாட வாழ்வில் வாழைப்பழங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றினை உள்ளெடுப்பதால் பெண்களில் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

American Heart Association இனால் இது கண்டறியப்பட்டுள்ளது.
பொட்டாசியத்தின் அளவு குறைவாக உள்ளெடுப்பவர்களை விடவும் அதனை போதிய அளவு உள்ளெடுப்பவர்களுக்கு இந்நோய் மற்றும் திடீர் மரணம் என்பவற்றிலிருந்து விடுபடும் வாய்ப்பு 12 சதவீதத்தால் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவின்படி பொட்டாசியத்தின் அதிகமான நுகர்வினால் தாழ் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
+

04/09/2014

ஆண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவது ஏன்..? - இதைப்படிங்க...

நடுத்தர வயதினை அடையும் ஒரு மனிதன் பல ஆரோக்கிய குறைவுகளுக்கு ஆளாகின்றான். ஆய்வு கூறும் உண்மையானது கல்யாணம் ஆன ஆண்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாத ஆண்கள் அதிக நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது தான்.

திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப பந்தம் என்ற காரணம் அவர்களை உடல் நலனை காக்கின்றதாம். திருமண ஆகாத ஆண்கள் முறையான உணவு எடுத்துக் கொள்வதில்லை. முறையான ஆர்வத்தினை வாழ்வில் கொள்வதில்லை.

அநேக ஆண்களுக்கு இது நோயில் கொண்டு முடிகின்றது. 25 வயதில் திருமணம் புரிபவர்கள் அதற்கு முன் குறைந்த வயதில் திருமணம் புரிபவர்களை விட அதிக காலம் வாழ்கின்றனர் என ஆய்வு கூறுகின்றது.

கணினி, மடிக்கணினி, செல்போன், செல்போனில் விளையாட்டு என நீண்டு கொண்டே செல்லும் நவீன உபயோகப் பொருட்கள், போதைப் பொருட்கள் போன்ற ஒரு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவதாக மன நல மருத்துவர்களால் கருதப்படுகின்றது.

இவர்கள் இயற்கையை விட்டு அதிகம் பிரிந்தே இருக்கிறார்களாம். இன்றைய ஐ.டி. இளைஞர்கள் 11 மணி நேரத்திற்கம் மேலாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இவர்களுக்கு உடல் ரீதியான ஆபத்தான பாதிப்புகள் 40சதவீதம் கூடி விடுகின்றது.

இவர்கள் மணிக்கு ஒரு முறை எழுந்து ஐந்து நிமிடமாவது நடந்து பிறகு வேலையைத் தொடருவது நல்லது. 45 வயதினை நெருங்கும் ஆண்களை அதிகம் வெய்யிலில் செல்லும் பொழுது `ஹிக்ஷி' கதிர் கூடுதலாக தாக்குகின்றனவாம்.

இவர்கள் சரும மருத்துவர் ஆலோசனைப்படி `க்ரீம்' பயன்படுத்துவது நல்லது. ஆண்களின் வயது கூடும் பொழுது அசதி, தூக்கம் இவற்றினால் வாகன விபத்துகள் கூடுகின்றது. என்றாலும் படு துடிப்பான இளைஞர்களின் கண் மூடித்தனமான வேகத்தினைக் காட்டிலும் இவர்களே மேல் என ஆய்வுகள் கூறுகின்றன.

சில ஆண்களுக்கு 65 வயதினை கடக்கும் பொழுது தற்கொலை எண்ணம் கூடுகின்றதாம். முதுமையின் வெளிப்பாட்டினை உணர முடியாமல் மன உளைச்சல் பெறும் இவர்கள் மருத்துவ சிகிச்சையின் மூலம் மிக நல்ல முன்னேற்றத்தினை அடைய முடியும்.

புகை பிடிக்கும் ஆண்கள் பக்கவாத பாதிப்பில் இருக்கும் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கின்றது. இவர்கள் எந்த நிமிடம் புகை பிடிப்பதை விடுகின்றார்களோ அந்த நிமிடத்திலிருந்தே இந்த அபாயம் குறையத் தொடங்குகின்றது.
+

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வீட்டிலேயே செய்யலாம் பயிற்சி..!

எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக ஜிம் போகவேண்டிய அவசியமில்லை. தினமும் காலையில் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்து உடலை வார்ம் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு, வீட்டில் ‘புஷ் அப்ஸ்’ என்று சொல்லப்படும் தரையில் படுத்து கைகளை கொண்டு உடலை மேலே உயர்த்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை வீதம் மூன்று செட் செய்ய வேண்டும்.

இதனால், மார்புப் பகுதி கை தசைகள் வலுப்பெறும். அதே சமயம் கடுமையான வலியும் இருக்கும். தினமும் இதைச் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம். அதன் பிறகு, ‘ஆப்ஸ் வொர்க் அவுட்’.

வயிற்று பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க இரு கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்து உடலை முன்னும் பின்னுமாக, படுத்துக் கொண்டே உயர்த்த வேண்டும். இது போன்ற எளிய வழிமுறைகளால் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கிவிடலாம்.
+

தொப்பை குறைய உதவும் ஒர்க்அவுட் - சொல்லப்போறேன் கேளுங்க..!

தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியவை.  ஆனால் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. இந்த பயிற்சி செய்து மிகவும் எளிமையானது. வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை செய்யலாம்.

தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. மேலும் இந்த பயிற்சி கால் முட்டிகளுக்கும், கைகளுக்கு நல்ல வலிமையைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். கால்களை ஒரு அடி அகலமாக வைக்கவும். கைகயை தலையின் பின்புறமாக கொண்டு சென்று இரு கை விரல்களையும் இணைத்து கொள்ளவும்.

இப்போது முன்புறமாக குனிந்து வலது கைமுட்டியால் இடது கால் முட்டியை தொட முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அனைவருக்கும் இவ்வாறு தொட வராது. பயிற்சியை தொடர்ந்து செய்ய செய்ய தொட முடியும். இப்போது இடது கைமுட்டியால் வலது கால் முட்டியை தொட வேண்டும்.

ஆரம்பத்தில் மெதுவாகவும், ஒரு வாரம் பழகிய பின்னர் வேகமாகவும் செய்ய வேண்டும். 15 முறை செய்த பின்னர் 5 விநாடிகள் ஓய்வு எடுத்து பின் மறுபடியும் பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும்.

நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவையும், நேரத்தையும் கூட்டிக் கொள்ளலாம்.  இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

கால் முட்டிவலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனை தரும். முகுது பகுதியில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், முகுது வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
+

சாப்பிட்டவுடன் டாய்லெட் செல்வது நல்லதா..? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

பலருக்கும் உள்ள வினோத பழக்கம் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க செல்வது. இதனால் வெளியூர் செல்லும்போது பலரும் தர்மசங்கடமும், அவஸ்தையும் அடைகின்றனர். ஆயுர்வேதத்தில் இதற்கு கிரகணி நோய் என்று பெயர்.

அதாவது வயிற்றிலிருந்து குடல் பகுதிக்கு செல்லும் வளைவுப் பகுதியான டியோடினத்தில் ஏற்படும் பாதிப்பே கிரகணி நோயாகும். வயிற்று போக்கு ஏற்பட்டு ஜீரணசக்தி சரி ஆவதற்கு முன்பாக தேவைக்கு அதிகமாக, தேவையற்ற உணவுகளை உண்பதால் தோஷங்கள் ஏற்பட்டு வயிற்று பாகமாகிய டியோடினம் பாதிக்கப்படுவதால் இந்நோய் உண்டாகிறது.

இந்த நோய் ஆரம்பத்தில் அதிக தாகம், சோர்வு, பலம் குறைந்தது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், ஜீரணம் தாமதம், உடலில் பாரம் ஏற்றியது போன்ற அறிகுறிகள் இருக்கும். சாப்பிட்ட உடன் மலம் கழித்தல், ரத்தசோகை, வயிற்றில் பெருமல் சத்தம், வயிற்றுப்புண், குடலில் எரிச்சல் உணர்வு, காய்ச்சல் உணர்வு, நாடித்துடிப்பு வேகமாக காணப்படுவது, முதுகுவலி, பல் ஈறுகளில் பழுப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஆயுர்வேதம் இதனை 6 வகையாக பிரிக்கிறது. வாதம், பித்தம், கபம், சன்னிபாகம் (வாதம் பித்தம் கபம் 3ம் கலந்தது), சங்கரக கிரகணி, கதிஅந்தர கிரகணி என 6 வகைப்படும். அக்னி எனப்படும் ஜீரணசக்தியை அதிகப்படுத்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

சித்திரகாதி குளிகை, துத்தவடி, ஜாதிபத்திரி சூரணம், கங்காதர சூரணம், நிர்பதி வல்லப ரசம், பியூசவல்லி ரசம், ரசம் பற்படி, சென்ன பற்படி, பஞ்சாமிர்த பற்படி, சாரியங்கிய கிருதம், சாருங்கியாதடி, கிரகணி கபாரசம் போன்றவை தன்மைக்கேற்ப வழங்கப்படும். ஜீரண சக்தி பிரச்சனை ஏற்படும்போது அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இல்லாவிடில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் வெளியேறுவதால் ரத்தசோகை ஏற்படலாம். பலக்குறைவு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் இதரநோய்கள் தாக்க வாய்ப்புகள் ஏற்படும்.  
+

நின்று கொல்லும் நீரிழிவு கட்டுப்படுத்தும் வழிமுறை இதோ உங்களுக்காக..!

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.

நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி Hyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
3. களைப்புத் தன்மை (Weakness)
4. எடை குறைவு (Weight Loss)
5. பசி அதிகரித்தல் (Increased appetite)
6. நாவறட்சி (Dry mouth)
7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச் சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன.

இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம் பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.

இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.
நமது உடலில் சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.

தேவையான மூலிகைகள்

வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.

உணவு முறைகள்

தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.

சாதாரணமாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம். கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு (Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப்படும்.

2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவுமுறைகள் என்பன அடங்கும்.

3. தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.

4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.

5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக…
+