13/08/2014

Leave a Comment

இனிப்புக்கு முதலிடம் கொடுங்க.. - ஆரோக்கியம் ஆனந்தமாகும்..!

திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் இது தவறான  முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்க வேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும். அப்போது  நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான  உணவை ஜீரணித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம்  காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.

தண்ணீர் குடிக்கும் முறை:-சிலர் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பார்கள். சிலர் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் ஆயுர்வேத கூற்றுப்படி  சாப்பிடும்போது இடையிடையே அளவோடு தண்ணீர் அருந்த வேண்டும்.

பீடா ஒகே:-உணவருந்திய பின்னர் புகையிலை சேர்க்காமல், வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அதனை வாயில் மென்று சாரை விழுங்குவது  ஜீரணத்திற்கு நல்லது. பசுநெய் அளவோடு சேர்ப்பது மிகவும் நல்லது.

தூக்கம் வேண்டாம்:-நாம் உணவு அருந்தியதுமே அனைத்து உடல் உறுப்புகளும் ஜீரணிப்பதில் ஈடுபடுவதால் சோர்வு ஏற்பட்டு தூக்கம் கண்களை தழுவும். ஆனால்  அவ்வாறு தூங்கினால் உடல் உறுப்புகள் ஜீரணம் செய்வதில் தடங்கல் ஏற்படும். எனவே உண்டவுடன் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் இரவு  உணவை படுப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் அக்னி (ஜீரணசக்தி) அதிகரிப்பதால் உண்டவுடன் சிறிது  நேரம் தூங்கலாம்.

0 comments:

Post a Comment