23/08/2014

Leave a Comment

நினைவாற்றலை அதிகரிக்கும் புடலங்காய்..!

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையின் உட்பகுதியில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். புடலங்காயில் நன்கு முற்றியதையே உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள புடலங்காயை பயன் படுத்த வேண்டும்

• ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது. காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

• தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

• அஜீரண கோளாரை எளிதில் சீராக்கி நல்ல பசியை உண்டாக்கும்.

• குடல் புண்ணை ஆற்றும். தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்

• இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையது.

• மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

• நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியை அதிகரிகிறது.

• பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறையும் குணபடுத்தும். கண் பார்வையை அதிகரிக்க செய்யும்.

• இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

• வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

0 comments:

Post a Comment