23/08/2014

Leave a Comment

வாயில் தோன்றும் பொதுவான பிரச்சினைகள் - தெரிந்துகொள்வோம்..!

* உதடுகளில் தோன்றும் நீர் நிறைந்த சிறு கட்டிகள் இவை ஒரே தட்டில் உணவை பகிர்ந்து உண்பது, ஒரு ஸ்பூனில் இருவர் சாப்பிடுவது, முத்தம், பாதிப்பு உடையவரின் மிக அருகாமையில் இருப்பது போன்வற்றின் காரணமாக அடுத்தவருக்கும் பரவும். எளிதில் சில நாட்களில் மறைந்து விடும். `கிரீம் மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை உபயோகித்தும் நிவாரணம் பெறலாம். இது அடிக்கடி தோன்றுமாயின் மருத்துவ ஆலோசனை தேவை.

* `கன்டிடாயீஸ்ட்' மூலமாக நாக்கில் ஏற்படும் `த்ரஷ்' எனப்படும் இந்த பாதிப்பு குழந்தைகள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், சில வகை மருந்துகளால் ஏற்படுவது நாக்கில் பட்டை பட்டையாக வெள்ளையாகத் தெரியும். இதற்கு மருத்துவ சிகிச்சை தேவை.

* நாக்கில் கறுப்பாக சிறு சிறு முடிகள் போன்று இருக்கும். வலி இருக்காது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. புகை பிடித்தல், வாய் வழி மூச்சு விடுதல், மருந்து, வாய் சுத்தமின்மை, வாயில் தேவையான அளவு எச்சில் இன்மை போன்றவையும் காரணமாகும். நாக்கினை சுத்தம் செய்வதே இதன் தீர்வு சில நேரங்களில் மருத்துவ உதவி தேவைப்படும்.

* லியுகோப்ளேகியா எனப்படும் இந்த பாதிப்பு குத்தும் பல், பொய் பல் சரியின்மை, அதிக புகை பிடித்தல், அதிக வெய்யில் இவற்றில் வாயினுள் சற்று வெள்ளையான திட்டுக்கள் தெரியும். வலி இருக்காது. காரணத்தினை சரி செய்யும் போது வெள்ளை திட்டு மறையும். ஆனால் புற்று நோய், ப்ளேக் பாதிப்பு இருக்கின்றதா? என்பதனை அறிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* சிகப்பும், வெள்ளையுமாக கன்னம் மற்றும் நாக்கில் ஏற்படும் வீக்கங்களின் பெயர் `லைகன் ப்ளனஸ்' இதுவும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது. இதில் வாய் புற்று நோய் பற்றிய கவனம் தேவை.

* நாக்கில் தேச வரை படம் போல் காணப்படும் பாதிப்பின் பெயர் `ஜியாக்ரபிக் டங்க்'. சற்று மேடும் பள்ளமுமாக நாக்கு காணப்படும். அவ்வப்போது இதன் தோற்றம் மாறும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு வேளை வலி இருந்தால் சாதாரண வலி மாத்திரைகளே போதும்.

* வாய் புற்று நோய்: பல வாரங்களாக போகாத புண் முகம், நாக்கு, வாய், கழுத்து இதில் ஏதேனும் சற்று மரத்தது போல் இருத்தல், உணவு மெல்லுவதில், விழுங்குவதில் கடினம் போன்றவை புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதிக புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை போன்ற சில வஸ்துக்களை பயன்படுத்தல் போன்றவை வாய் புற்று நோய்க்கான அடிப்படை காரணங்கள். உடனடி சிகிச்சை அவசியம்.

* கீழ் தாடை மூட்டில் வலி, காது, முகம், கழுத்தில் வலி எனக் காணப்படுவது பெரிதாய் வாய் திறந்து கொட்டாவி விடும்போது அடிக்கடி பல்லு கடிப்பது போன்றவற்றால் ஏற்படும் தாடை மூட்டு வலி. இதற்கு கொஞ்சம் ஓய்வு, மருந்து போதும். என்றாலும் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படுகின்றது.

* உடைந்த பல், பல் அடைப்பில் வைக்கும் ஓட்டுப் பொருளாலும் வாயில் பாதிப்பு ஏற்படலாம்.

* ஈறுகளின் பாதிப்பு பல்லை விழ வைத்து விடும். முறையான பல், ஈறு பராமரிப்பே இதனைத் தவிர்க்கும் வழி இத்துடன் ஈறுகளில் பல வகையான பாதிப்புகள் சுகாதார மின்மையின் காரணமாக ஏற்படலாம். பல் மருத்துவரை அணுகவும்.

* பல் வலிக்கு சிலர் வாயில் வலி மாத்திரையினை அடக்கிக் கொள்வர். இது சுற்றுப்புற பகுதிகளை எரித்து விடும்.

* பல்லில் ஓட்டை, சொத்தை, நிறம் மாறுதல், ஈறு பகுதிகளில் கட்டி போன்ற பாதிப்புகள் சுகாதாரமின்மை பாதிப்பினாலேயே ஏற்படுகின்றன. மருத்துவ உதவி அவசியம்.

* வாய் நாற்றம் : இதன் காரணம் வாயில் கிருமிகள், வாயால் மூச்சு விடுதல், வறண்ட வாய், ஈறுகளின் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது. மருத்துவ சிகிச்சையும், வாய் சுகாதாரமும் இதற்கு அவசியம்.

0 comments:

Post a Comment